கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா!கேன்சருக்குமா!

0
86

கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா! கேன்சருக்குமா!

குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி உண்ணும் போது கருவேப்பிலையை உண்ணாமல் எடுத்து வைத்து விடுகிறோம். ஏதோ வெண்டாதது பொல கரு வேப்பிலையை ஒதுக்கி விடுகிறோம். ஆனால் கருவேப்பிலை எவ்வளவு மருத்துவ குணம் கொண்டது தெரியுமா?

உணவின் வாசனையை  அதிகரிக்கத் தான் கறிவேப்பிலை பயன்படுகிறது  என்று பலர் கருதுகின்றனர்.  இதனால் தான் சாப்பிடும் போது  உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால்  இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள்  இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம்  தெரியவந்துள்ளது.

   கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன.மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான்சொரின், ஆஸ்பார்டிக்  அமிலம், அயாமைன், புரோலைன்  போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. 

இவைகள் தான் கறிவேப்பிலைக்கு  இனிய மணத்தை தருகிறது.  பல மருத்துவ குணங்களையும்  வெளிப்படுத்துகிறது.இந்திய  சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும்  ஆற்றல் உடையது என்பதை அண்மையில் உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது புற்றுநோய்,இதய  நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர். 

கறிவேப்பிலையிலிருந்து  எண்ணை எடுத்து அதை  நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு  தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என வேளாண்  மருத்துவ ஆராய்ச்சி  நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம்  கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100  கிராம்தேங்காய் எண்ணையில்  கலந்து இதமானசூட்டில் ஈரப்பதம்  நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து  வந்தால் உடல்உஷ்ணம் மங்கும்.  பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. 

இது தவிர நீரிழிவு நோயாளிகள்  காலையில் 10 கறிவேப்பிலை  இலையையும், மாலையில் 10  இலையையும் பறித்த உடனேயே  வாயில் போட்டு மென்று சாற்றை  விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை  பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். 

மேலும் படிக்க : இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்!

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3  மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால்  உடல் கனமாவது குறைக்கப்படும்.  சிறுநீரில் சர்க்கரை  வெளியேறுவதும் முற்றிலும்  தடைசெய்யப்படும். கறிவேப்பிலை  ரத்தத்தில் இருக்கும்  கொழுப்பை குறைக்கவும்,  அறிவை பெருக்கவும் உதவுகிறது.  கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும்  குறையும் என்கிறார்கள்  மருத்துவர்கள். இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட  சிபாரிசு செய்கிறது. 

மேலும் படிக்க : பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!

75 – 125 கிராம் கீரைகளையும்  சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை  சாப்பிட முக்கியமான 10  காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று  கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, தோல்நோய் போன்றவற்றிக்கு எளிதில் கிடைக்கும் இந்த பழம் அருமருந்தாகும்!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K