தருமபுரி தொகுதிக்கு MP திமுகவின் செந்தில்குமாரா? பாமகவின் அன்புமணி ராமதாசா?

0
147

தருமபுரி தொகுதிக்கு MP திமுகவின் செந்தில்குமாரா? பாமகவின் அன்புமணி ராமதாசா?

மக்களவை தேர்தல் முடிவுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரியே. இங்கு திமுகவின் சார்பாக டாக்டர் செந்தில்குமார் போட்டியிட்டார். அன்புமணி ராமதாஸ் அவர்களை எதிர்த்து திமுகவின் வேட்பாளராக களமிறக்கப்பட்ட செந்தில்குமார் புதியவர் என்றாலும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீதான வெறுப்பில் அன்புமணியை எதிர்த்து பலகட்ட இழுபறிகளுக்கு பிறகு வெற்றி பெற்று விட்டார்.

இங்கு அன்புமணி ராமதாஸ் கடந்த 5 வருடங்களாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும் அது மக்கள் மத்தியில் சரியாக சென்றடையவில்லை என்றே பல்வேறு தரப்புகளிலும் கூறப்படுகிறது. மேலும் அன்புமணி ராமதாஸ் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திமுக வேட்பாளரும் அதே சமூகத்தை சேர்ந்தவர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இதையெல்லாம் விட திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் பல்வேறு இலவச மற்றும் தள்ளுபடி சலுகைகளை தேர்தல் வாக்குறுதி அறிக்கையாக வெளியிட்டிருந்தார்கள்.

திமுக சார்பாக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களையும், மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களையும் தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தது. மேலும் 5 பவுனுக்கு குறைவாக அடகு வைத்திருக்கும் நகைகளையெல்லாம் இலவசமாக மீட்டு கொடுப்பதாகவும் கூறியிருந்தது. இது பெண்கள்,விவசாயிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வாக்குகளாக மாறியது.

இந்நிலையில் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்ற திமுக காங்கிரஸ் கூட்டணி தேசிய அளவில் படு தோல்வியை தழுவி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்து விட்டது. தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலிலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசே ஆட்சியே மீண்டும் தொடர்கிறது.

இதையும் படிக்கலாம்

சொந்த மாவட்டத்திலேயே அடைந்த தோல்வியால் சாட்டையை சுழற்றும் எடப்பாடி பழனிசாமி

இவ்வாறு உள்ள சூழ்நிலையில் தருமபுரி தொகுதியில் அன்புமணியை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் செந்தில்குமாரிடம் திமுக அளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவீர்கள் என்பது பற்றி சமூக வலைத்தளங்களில் மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். அதற்கு அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் அல்லது நிறைவேற்ற முடியாது என்று நேரிடையாக பதில் கூறாமல் ஏற்கனவே அங்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் ராஜ்ய சபா உறுப்பினராக வாய்ப்புள்ளதாகவும் அவரும் இந்த தொகுதியில் மக்கள் பணியற்றலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது திமுக உறுப்பினர் செந்தில்குமார் தான் ஆனால் அவரோ அந்த தொகுதியில் தோல்வியடைந்த அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராகி தருமபுரி தொகுதிக்கு சேவை செய்வார் என்று கூறியது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அவர் கூறுவது போல அன்புமணி ராமதாசுக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆகும் வாய்ப்பு கிடைத்தாலும் அவர் தமிழகம் முழுவதற்குமாக தான் செயல்படுவாரே தவிர குறிப்பிட்ட தொகுதிக்காக செயல்பட முடியாது.

இவ்வாறு திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வாக்குகளை கவர மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் தருமபுரி மட்டுமில்லாமல் ஒட்டு மொத்தமாக தமிழக மக்களும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளால் ஏமாற்றபட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

இதையும் படிக்கலாம்

ஸ்டாலினை ஆட்சியை பிடிக்க விடாமல் மீண்டும் விரட்டியடித்த பாமக.

author avatar
Parthipan K