முன்விரோதத்தால் பட்ட பகலில் இளைஞர் படுகொலை.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

0
114

தனியார் நிறுவன ஊழியர் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, எழும்பூர் பகுதியை சேர்ந்தவர் விவேக். இவருக்கு திருமணமாகி தேவிப்பிரியா என்ற மனைவியும் ஒரு வயது குழந்தையும் உள்ளது. இவர் எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தினமும் அவரது மனைவி தேவிபிரியாவை எழும்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் விட்டுவிட்டு அவரது அலுவலகத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

வழக்கம் போல இன்று காலை வழக்கம் போல மனைவியை விட்டு விட்டு அவரது அலுவகலத்திற்கு சென்றுவிட்டார். அந்த அலுவலகத்தில் உள்ள சந்தோஷ் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.சந்தோஷிற்கு அதிக அளவு வேலை கொடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை பழிவாங்க நேரம் பார்த்து கொண்டிருந்தார்.

சம்பவதன்று, வழக்கம் போல அலுவலகத்திற்கு வந்த அவரை சந்தோஷ் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த உடன் பணிபுரிவர்களையும் வெட்டியுள்ளார்.இதனை அடுத்து, அங்கிருந்து சந்தோஷ் தப்பி சென்றார். அங்கிருந்தவர்கள் விவேக்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பகுதியை ஆய்வு செய்தனர்.

அப்போது, அங்கே பதுங்கி இருந்த சந்தோஷை காவல்துறையினர் கைது செய்தனர்.இதனை அடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆந்திராவில் உள்ள சட்டகல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.சந்தோஷ் ஏற்கனவே ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றிய போது விவேக்கிற்கும் அவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அதனால், அன்று கஞ்சா போதையில் இருந்த அவர் விவேக்கை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் பட்டபகலில் கொலை நடந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.