பெற்றோர் சண்டையிட்டதால் மகன் செய்த செயல்… சோகத்தில் குடும்பத்தினர்..!

0
122

பெற்றோர் சண்டையிட்டதால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி கங்கையம்மாள். இவர்களுக்கு அரிகிருஷ்ணன் (21), பாலகிருஷ்ணன் (19) என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

கல்லூரி மாணவரான பாலகிருஷ்ணன் கடந்த சில தினங்களாக தாய் தந்தைக்கிடையே ஏற்பட்ட தகராற்றை சமாதானம் செய்து வந்துள்ளார். சம்பவதன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர் கத்தியை எடுத்து மனைவியை கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனை கண்ட பாலகிருஷ்ணன் யாரும் சாக வேண்டாம் நான் சாகிறேன் என கூறி தந்தையிடம் இருந்து கத்தியை பறித்து தன்னை தானே குத்தி கொண்டார். இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.