இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்!

0
111
Young woman mutilated and murdered by police A brutal gang rape like standing up again!
Young woman mutilated and murdered by police A brutal gang rape like standing up again!

இளம் பெண் போலீசின் மர்ம உறுப்புகளை சிதைத்து கொலை! மீண்டும் நிர்பயா போல ஒரு கொடூர கூட்டு பலாத்காரம்!

டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தவர் தான் இருபத்தி ஒரு வயதான இளம் காவல்துறை அதிகாரி ராபியா. இவர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் டெல்லியில் உள்ள சிவில் பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பணிக்குச் சென்ற ராபியா வீடு திரும்பவில்லை. எனவே அவரது பெற்றோர்கள் கலக்கமடைந்து பல இடங்களில் தேடியும் அந்த பெண் கிடைக்கவில்லை.

இதனால் அவரது பெற்றோர் முதலில் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். தொடர்ந்து மகளைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காததால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மேலும் ஒரு மனுவை அளித்தனர். இந்த நிலையில் காணாமல் போன ராபியா பரிதாபமாக, வெட்டுக் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து போலீஸ் விசாரணையிலும், பிரேத பரிசோதனை அறிக்கையிலும், வெளியான தகவல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. ராபியாவை அந்த கொடூர கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திக் கிழித்து, கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்துள்ளனர். முகம் மிகவும் கொடூரமாக உள்ளது.

அந்த அளவிற்கு அந்த இளம் பெண்ணை கொடுமை செய்துள்ளனர் நயவஞ்சகர்கள். இதேபோல் கடந்த மாதமும் ஒரு 9 வயது சிறுமியை அங்கு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதும் குறிப்பிடத்தக்கது. இதே டெல்லியில் தான் அந்த கொடூரமும் நடந்தேறியது.  காமுகர்கள் மாதத்திற்கு ஒன்று என்று கணக்கு வைத்துள்ளார்களா என்ன? எங்குதான் போனது மனிதாபிமானம்.

எல்லாம் ஏன் இப்படி வெறி பிடித்த மனித மிருகங்களாக இருக்கிறார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அரசு கையில் எடுப்பதோடு விட்டுவிடுகிறார்கள். அதற்கான தக்க தண்டனை கிடைக்கும் வரை அவர்களை நாம் எதுவுமே செய்ய முடியாது. அரசு தான் இதை சீர்திருத்தம் செய்ய வேண்டும். கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். இந்த நிலையில் ராபியாவின் இந்த சம்பவத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள பல பொது மக்களும், சிறுபான்மையினரும், போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதேபோல நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சமூக வலைதளங்களிலும் #Justice For Rabiya என்ற வாசகத்தின் மூலம் தங்களது கண்டனங்களை பொதுமக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ராபியாவை கொன்றவர்களை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உடனே தண்டிக்க வேண்டும் என்றும், கலெக்டர் அலுவலக ஊழல் வெளியே வராமல் இருக்கத்தான் இப்படி அவர்  கொல்லப்பட்டிருக்கலாம். என சந்தேகம் எழுவதாகவும் தமிழக எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது கூட உண்மையாக இருக்கலாம். யாருக்கு தெரியும்? சம்பந்தப்பட்டவர்களை தவிர. கடந்த 26ஆம் தேதி மாலை அலுவலகத்திலிருந்து ராபியாவை பரிதாபாத்துக்கு கடத்தப்பட்டு இந்த வன்கொடுமை சம்பவம் செய்யப்பட்டதாகவும், அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். நினைத்து பாருங்கள் போலீஸ் அதிகாரி. ஆனால் இப்படி ஒரு நிலைமை. அப்போ சாதாரண பெண் என்றால் சும்மா விடுவார்களா? அரசு இதற்கு என்ன சொல்ல போகிறது. பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவா? அல்லது கயவர்களுக்கா? பொறுத்திருந்து பார்க்கலாம்.