ரெயிலில் இப்படியும் இடம் பிடிக்கலாம்! உயிருடன் மீண்டு வந்த இரண்டாம் சந்திரமுகி!

0
103

ரெயிலில் இப்படியும் இடம் பிடிக்கலாம்! உயிருடன் மீண்டு வந்த இரண்டாம் சந்திரமுகி! 

மெட்ரோ ரயிலில் இடம் பிடிப்பதற்காக இளம் பெண் ஒருவர் சந்திரமுகி போல் வேடம் அணிந்து அனைவரையும் பயமுறுத்தி அதில் வெற்றி பெற்று வெற்றிகரமாக இடத்தை பிடித்துள்ளார்.

மெட்ரோ  ட்ரெயினில் காலை மாலை என இரு வேளையும் பணி நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.  இதில் நின்று கொண்டு செல்வதே பெரும்பாடு எனும் போது அதற்கு இடம் கிடைத்தாலே போதும் என்ற சூழல் காணப்படும்.

கல்யாண விருந்து நடைபெறும் பொழுது சாப்பாடு பந்தியில் இடம் பிடிக்க ஒரு இடத்தை சுற்றி இரண்டு மூன்று பேர் நிற்பர். அதேபோல் ஒரு சூழல்தான் மெட்ரோ ரயிலில் ஏற்படும். எந்த ஸ்டேஷனில் யார் எப்போது இறங்குவார்கள் என்று தெரியாமல் இருக்க வேண்டும். அமர்ந்து இருப்பவர்கள் இறங்குவதற்கு எழுந்து நின்று நின்று கொண்டிருப்பவர்களுக்கு உட்கார வழி விடும் பொழுது  அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்து விடும்.

இந்தக் கூட்டத்தில் இடம் பிடிக்க இளம் பெண் ஒருவர் புதுவிதமான யுக்தியை கையாண்டு உள்ளார். அதற்கு அவருக்கு பலன் கிடைத்தது ஆச்சரியப்படத்தக்க விஷயம். அந்தப் பெண் அடர் மஞ்சள் வண்ண நிறத்தில் சேலை அணிந்து சந்திரமுகி படத்தில் வருவது போல் பயங்கரத் தோற்றத்தில்  டெல்லியில் மெட்ரோ ரயிலில் ஏறி உள்ளார்.

பயணிகளை ஒவ்வொருவராக பயப்படுத்திய அப்படியே சென்ற அவருக்கு கை மேல் பலன் கிடைத்தது. காதில் ஹெட்போன் மாட்டிகொண்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென தன் முன்னால் நின்று கொண்டிருந்த சந்திரமுகியை கண்டதும் எழுந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தார்.

அதன் பின்னர் அந்த இளைஞரின் இடத்தில் அமர்ந்த பின்னும் அந்த சந்திரமுகியின் கோபம் தீராமல் ஆவேசமாகவே இருந்தார். சம்பவம் குறித்து பொதுமக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.