Wow…. நிலவில் ‘லேண்டர்’ தரையிறங்கும் காட்சியை கண்டுகளிக்கலாம் – இஸ்ரோ தகவல்!!

0
36

 

Wow…. நிலவில் ‘லேண்டர்’ தரையிறங்கும் காட்சியை கண்டுகளிக்கலாம் – இஸ்ரோ தகவல்

நாளை நிலவில் ‘லேண்டர்’ தரையிறங்கும் காட்சியை நேரடி ஒளிபரப்பில் கணலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய இந்தியா சந்திரயான் – 2வை விண்ணில் செலுத்தியது. ஆனால், நிலவின் மேற்பகுதியில் சந்திரயான் 2 லேண்டர் மோதியதால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது.

தற்போது சந்திரயான் 3-ஐ இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் லேண்டர் நாளை நிலவில் இறங்க உள்ளது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கடந்த முறை அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த ஆர்பிட்டர் விண்ணில் வந்த சந்திரயான் 3 லேண்டருடன் தொடர்வை ஏற்படுத்தி உள்ளது. இவை இரண்டும் தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் ‘சந்திரயான்-3’-ன் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காண்பதற்காக ஆவலாக காத்திருக்கின்றனர். இவர்களின் ஆசையை நிறைவேற்ற லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் உலக மக்கள் அனைவரும் காணலாம் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

நாளை மாலை 5.27 மணி முதல் நேரலை ஒளிபரப்பு தொடங்கப்பட உள்ளது என்றும், இஸ்ரோ இணையதளமான https://www.isro.gov.in/ மற்றும் Youtube மற்றும் https://www.facebook.com/ISRO/ மற்றும் டிடி நேசனல் டிவி. சேனலில் நேரடி ஒளிபரப்பை காணலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

நாளை நிலவில் ‘லேண்டர்’ தரையிறங்கும் காட்சியை நேரடி ஒளிபரப்பில் கணலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

கடந்த 2019ம் ஆண்டு நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய இந்தியா சந்திரயான் – 2வை விண்ணில் செலுத்தியது. ஆனால், நிலவின் மேற்பகுதியில் சந்திரயான் 2 லேண்டர் மோதியதால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது.

 

தற்போது சந்திரயான் 3-ஐ இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் லேண்டர் நாளை நிலவில் இறங்க உள்ளது.

 

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கடந்த முறை அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த ஆர்பிட்டர் விண்ணில் வந்த சந்திரயான் 3 லேண்டருடன் தொடர்வை ஏற்படுத்தி உள்ளது. இவை இரண்டும் தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் ‘சந்திரயான்-3’-ன் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காண்பதற்காக ஆவலாக காத்திருக்கின்றனர். இவர்களின் ஆசையை நிறைவேற்ற லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் உலக மக்கள் அனைவரும் காணலாம் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

 

நாளை மாலை 5.27 மணி முதல் நேரலை ஒளிபரப்பு தொடங்கப்பட உள்ளது என்றும், இஸ்ரோ இணையதளமான https://www.isro.gov.in/ மற்றும் Youtube மற்றும் https://www.facebook.com/ISRO/ மற்றும் டிடி நேசனல் டிவி. சேனலில் நேரடி ஒளிபரப்பை காணலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

 

 

 

author avatar
Gayathri