கொரோனா தொற்று 13லட்சத்தை தாண்டியது : அலறும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள்!

0
132

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 13 லட்சத்து 46 ஆயிரத்து 482 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 692-ஐ எட்டியுள்ளது, மேலும் 2 லட்சத்து 78 ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது, உலக அளவில் இந்த நோயால் பலியானார்களின் எண்ணிக்கையில் கிட்ட பாதியை தொடுகிறது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 4,281 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 111 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 319 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / குணமடைந்தவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 868/56/52
டெல்லி – 525/19/07
தமிழ்நாடு – 621/06/06
கேரளா – 327/55/02
தெலுங்கானா – 321/7/34
கர்நாடகா – 163/12/4
குஜராத் -146/22/12
மத்திய பிரதேசம் -256/0/9

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K