நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை அபகரித்த பெண் வழக்கறிஞர் கைது!!

0
185
#image_title

நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை அபகரித்த பெண் வழக்கறிஞர் கைது!!

கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான 60 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு

பூர்வீக சொத்து எனக்கூறி போலி ஆவணம் மூலம் அபகரித்து நாடகமாடியது விசாரணையில் அம்பலம்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1947 ஆம் ஆண்டு கந்தசாமி நாயுடு மாணவர்களின் கல்விக்காக சென்னை அபிராமிபுரம் திரையரங்கு இருந்த இடத்திற்கு பின்புறத்தில் இருந்து ஓட்டேரி வரை சுமார் 400 கிரவுண்ட் இடத்தை வாங்கி வைத்துள்ளார்.

டிரஸ்ட் ஆஃப் மெட்ராஸ் என்ற பெயரில் கந்தசாமி நாயுடு ,தன் குடும்பத்தினருக்கு பிறகு மாணவர்களின் கல்விக்காக அரசாங்கம் எடுத்து நடத்தும் படி எழுதி வைத்துள்ளார்.

அந்த அடிப்படையில் கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான 400 கிரவுண்ட் இடத்தை சென்னை உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட நீதிபதி தலைமையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் ரெஜினா ஸ்ரீ என்ற வழக்கறிஞர், வரதம்மாள் தோட்டம் பகுதியில் உள்ள 44 கிரவுண்ட் இடத்தில் உள்ள 20 கிரவுண்ட் இடத்தை என்பது தனது பாட்டி மாரியம்மாள் என்பவர் சொத்துக்களை பிரிப்பதன் மூலம் மூலம் தனக்கு எழுதி வைக்கப்பட்டதாகவும், அதை சிலர் ஆக்கிரமிப்பதாக கூறி வழக்குத் தொடர்ந்து தனக்கு சாதகமாக உத்தரவையும் பெற்றுள்ளார்.

இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து வருவாய்த்துறையில் தனது பெயருக்கு ஆவணங்களை மாற்றி பதிவு செய்ய முயற்சித்த போது, கந்தசாமி நாயுடு அறக்கட்டளை சொந்தமான நிலத்தை வழக்கறிஞர் ரெஜிலா ஸ்ரீ அபகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது

இதனை எடுத்து கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் என்பது சென்னை உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டின் கீழ் மாவட்ட நீதிபதி தலைமையில் நிர்வகிக்கப்படுவதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் அட்மினிஸ்ட்ரேட்டர் ஜெனரல் ராஜு என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் வழக்கறிஞர் ரெஜிலா ஸ்ரீ தனது பாட்டி மாரியம்மாள் 2006 ஆம் ஆண்டு எழுதி வைத்ததாக கூறி போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், வழக்கறிஞரான ரெஜிலா ஸ்ரீ அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அதில் பூர்வீக சொத்து எனக்கூறி ஆக்கிரமிப்பில் உள்ள நபர்கள் மீது வழக்கு தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ரெஜிலா ஸ்ரீ அவரது பாட்டி மாரியம்மாள் மற்றும் சித்தி நாகரத்தினம் மூன்று பேர் மீது நிலத்தை அபகரித்த விவகாரத்தில் வழக்கில் சேர்க்கப்பட்டு மேற்கொண்டுள்ளனர்.

இதில் உறவினர் நாகரத்தினம் இறந்த காரணத்தினால், வயதான பாட்டி மாரியம்மாள் இடம் விசாரணை நடத்தி தற்போது வழக்கறிஞர் ரெஜிலா ஸ்ரீயை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரெஜினா ஸ்ரீ தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தையே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் கீழமை நீதிமன்றத்தில் போலி ஆவணம் மூலம் உத்தரவு பெற்று அபகரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Savitha