காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

0
124

காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

கோவை மாவட்டம் பீளமேடு அவிநாசி சாலையில் செப்டம்பர் 6 அன்று காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை விசாரித்ததில் அந்த பெண்ணின் கழுத்து மற்றும் உடலில் கழுத்து நெரித்த அடையாளங்கள் எதுவும் இல்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் கேமராவில் பதிவானது.இது கொலை வழக்காக இருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகித்தனர்.எனினும் தடயவியல் அறிக்கைகளைப் பெற்ற பிறகு அந்தப் பெண் விபத்தில் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.கோயம்புத்தூர் நகர காவல்துறை செப்டம்பர் 6 அன்று ஒரு வணிக நிறுவனத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளை சேகரித்தது.

சுமார் 60 வயதுடைய ஒரு பெண் சாலையில் படுத்திருப்பது அதில் தெரிய வந்தது.அந்த பெண்ணின் உடல் மீது பல வாகனங்கள் ஓடியதால் அவரது உடல் அடையாளம் காணமுடியாத முகத்துடன் கண்டெடுக்கப்பட்டது.சித்ரா சிக்னலில் கார் வலதுபுறம் திரும்பியதை சிசிடிவி காட்சிகள் காட்டியதாகவும் சில நிமிடங்களில் வாகனம் திரும்பி சர்வதேச விமான நிலைய சாலையை நோக்கி சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் புதுக்கோட்டை வரை அந்த காரை கண்காணித்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வாகனத்தின் பதிவு எண் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தது என்றும் போலீசார் தெரிவித்தனர்.கார் மற்றும் அதன் உரிமையாளர் பற்றிய கூடுதல் தகவலை அறிய கோவை போலீசார் திருவள்ளூர் போலீஸை அணுகியுள்ளனர்.

கோயம்புத்தூர் போலீசார் அந்த பெண் சின்னியம்பாளையம் அருகே விபத்தில் சிக்கியிருக்கலாம் என்றும் கார் பீளமேடு அருகே பிரிவதற்கு முன்பு சிறிது தூரம் அவரது உடலை இழுத்து சென்றிருக்கலாம் என்றும் கூறினார்.இருப்பினும் இந்த சம்பவம் கொலையா அல்லது விபத்தா என்று இன்னும் போலிசார் கண்டுபிடிக்கவில்லை.இந்த வழக்கை விசாரிக்க இரண்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

author avatar
Parthipan K