ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அமீரகத்தில் நடக்குமா?

0
49

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு  வருகின்றன.

அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கிறது. ஐபிஎல் போட்டி வெளிநாட்டில் நடத்தப்பட்டால் இந்தியாவுக்கு பொருளாதாரம், வருவாய் இழப்பு ஏற்படும். அதனால் பிசிசிஐ தொடரை நிறுத்த வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

author avatar
Parthipan K