இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி வெற்றி பெறுமா இந்திய அணி?

0
74

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், தற்போது இந்தியா தென்னாபிரிக்க அணியுடன் விளையாடி வருகிறது.

அதே நேரம் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று இருக்கக்கூடிய இந்திய அணி, இந்த முறை எப்பாடுபட்டாவது தென் ஆபிரிக்க அணியை வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் சென்றது. ஆனால் அந்த அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது இதன்மூலமாக டெஸ்ட் தொடர் இந்திய அணியின் கைகளில் இருந்து நழுவி விட்டது.

ஆனால் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று களமிறங்கிய இந்திய அணிக்கு தற்சமயம் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த 3 ஒருநாள் போட்டி தொடரில் 2 போட்டிகளை தென்ஆப்பிரிக்க அணியிடம் பறிகொடுத்தது இந்திய அணி.

இந்தநிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்றைய தினம் தென்னாபிரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்திய அணி தொடரை கைப்பற்ற இல்லை என்றாலும்கூட ஆறுதல் வெற்றியையாவது பதிவு செய்யுமா? என்பது தற்போது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அதோடு இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், தீபக்சாகர், சூர்யகுமார் யாதவ், உள்ளிட்டோருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது.