பிரேசிலில் ஒரே நாளில் இத்தனை ஆயிரம் பேர் பாதிப்பா?

0
81

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. மனித குலத்தின் இயல்பு வாழ்க்கையையும், அரசுகளின் சுமுக செயல்பாட்டுக்கும் இந்த கொரோனா தொடர்ந்து தடை போட்டு உள்ளது. கொரோனா பாதிப்பில் உலக நாடுகள் பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ள பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,521 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் மேலும் 447 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு 4,137,521 ஆகவும், உயிரிழப்பு 1,26,650 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் சுமார் 33 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்கிழக்கு மாகாணமான சாவ் பாலோவில் 8,56,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31,353 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டின் சுகாதார அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

author avatar
Parthipan K