எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்!

0
68
Will not buy anything from our house! I will burn you now! The cruel act of the family!
Will not buy anything from our house! I will burn you now! The cruel act of the family!

எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்!

தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் அருகே மேலகடம்பாவை சேர்ந்த சந்தனம் மகன் முத்துக்குமார். இவருக்கு ஆதிநாதபுரத்தை சேர்ந்த பாப்பாவுக்கு வயது 35. இவர்களுக்கு எட்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் அவரது குடும்பத்தினரும் பாப்பாவை துன்புறுத்தி வந்தனர்.

தினந்தோறும் பாப்பாவை வரதட்சனை கேட்டு அடித்து உதைத்து துன்புறுத்தினர். இந்நிலையில் அடிக்கடி கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதுள்ளது. அப்போது கணவர் முத்துக்குமார் மாமனார் சந்தனம், மாமியார் சந்திர புஷ்பா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பாப்பாவை அடித்து உதைத்தனர். இவர்கள் மூவரும் கேட்ட வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரம் அடைந்து வீட்டில் வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை எடுத்தனர். திடீரென மண்ணெண்ணெய் திறந்து பாப்பாவின் உடலில் ஊற்றி மூன்று பேர் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

பாப்பாவின் உடலில் தீப்பிடித்து எரிந்ததால் வலி தாங்காமல் கத்தி அலறியுள்ளார். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் திரண்டு வந்து அவரது உடலிலிருந்து தீயை அணைக்க முயன்றனர். தீயை அணைத்து விட்டு உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். இந்த தகவலை அறிந்து உடன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பாப்பாவின் உடலில் 95 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டுள்ளார். டாக்டர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன.

இது குறித்த போலீஸர் விசாரணைக்கு ஆஸ்பத்திரிக்கு சென்ற பாப்பாவிடம் வாக்குமூலம்  பெற்றனர். அப்போது அவர் தன் மீது கணவன் மாமனார் மற்றும் மாமியார் ஆகிய மூன்று பேரும் திட்டமிட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து குரும்பூர் போலீசார் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து பாப்பாவின் கணவர் முத்துகுமாரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மாமனார், மாமியார் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வரதட்சணைக்காக இளம்பெண் மீது கணவரும், குடும்பத்தினரும் தீவைத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
CineDesk