மாரி செல்வராஜின் அடுத்த கதாநாயகன் இவர் தான்: புதிய கூட்டணி!

0
80

மாரி செல்வராஜின் அடுத்த கதாநாயகன் இவர் தான்: புதிய கூட்டணி!

மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களில் பரியேறும் பெருமாளும் ஒன்று. 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முக்கிய விருதுகளில் இப்படம் விருதுகளை அள்ளியது. இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பாரட்டப்பட்டார். இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த ஓராண்டாக நடந்த திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிவுற்று இப்போது கர்ணன் எனப் பெயர் சூட்டப்பட்டு அந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மாஞ்சோலை கலவரத்தில் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் தனுஷ் தேயிலை தோட்ட தொழிலாளியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. விறுவிறுவென நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தினைப் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவரது மூன்றாவது படத்தில் விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். த்ருவ் விக்ரம் நடித்த  ஆதித்ய வர்மா படத்தில் அவரின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை நீலம் புரொடக்‌ஷன் சார்பில் இயக்குனர் ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக சொல்லபடுகிறது. இந்த கூட்டணியால் இப்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

author avatar
Parthipan K