நடிப்பை விட்டு விலக நினைக்கிறாரா அஜித்? நடிகரின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி !

0
101

நடிப்பை விட்டு விலக நினைக்கிறாரா அஜித்? நடிகரின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி !

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களுள் ஒருவரான அஜித் தான் இன்னும் சில படங்களில் மட்டுமே நடிக்க இருப்பதாக தன்னிடம் கூறியதாக சக நடிகர் ஒருவர் சொல்லியுள்ளார்.

தமிழ் சினிமாவில் காமடி மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் 500 படத்துக்கும் மேல் நடித்திருப்பவர் ’லொள்ளு சபா’ சாமிநாதன். லொள்ளு சபா எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சந்தானத்தோடு இணைந்து நடித்து புகழ்பெற்றதால் அவர் லொள்ளு சபா சாமிநாதன் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் அஜித் பற்றிய சொல்லிய தகவல் ஒன்று அஜித் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அந்த நேர்காணலில் தான் நடித்த காமெடி ஜாம்பவான்கள் மற்றும் சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினி, அஜித் மற்றும் விஜய் போன்றவர்களுடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்த அனுபவத்தைப் பேசிய அவர் ‘அஜித் மிகவும் எளிமையான மனிதர். எந்த வொரு ஹீரோவையும் விட என்னிடம் நெருக்கமாகப் பழகினார். என் மேல் கைபோட்டுக் கொண்டு பேசி என்னை நெகிழவைத்தார். அப்போது நான் இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறேன் போன்ற விவரங்களைக் கேட்டார்.

பின்னர் நான் இன்னும் கொஞ்ச காலம்தான் நடிக்கலாம் என்று இருக்கிறேன் எனக் கூறி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். நான் ஏன் என்று கேட்டபோது ‘மக்கள் என்னை வேண்டாம் என்று முடிவு எடுப்பதற்குள் நானாக விலகிக் கொள்ள வேண்டும்’ எனக் கூறினார். சார் உங்களுக்காக உங்கள் ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள் அப்படியெல்லாம் செய்யாதீர்கள் எனக் கூறினேன். என்னை மேலும் பல படங்கள் நடியுங்கள் என சொல்லி வாழ்த்தினார்’ எனக் கூறியுள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். தற்போது 48 வயதாகும் அஜித் இன்னும் ஒரு 10 வருடமாவது நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கார் ரேஸ் விபத்து ஏற்பட்ட போதும் மங்காத்தா படத்தின் போது எழுந்த பிரச்சனையின் போது அஜித் சினிமாவை விட்டு விலகும் முடிவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K