படிக்காத குழந்தையை அடித்த மனைவி! கணவனின் கொடூர செயல்! பெண்களே உஷார்!

0
90
Wife who scored uneducated child! Husband's cruel act! Girls beware!
Wife who scored uneducated child! Husband's cruel act! Girls beware!

படிக்காத குழந்தையை அடித்த மனைவி! கணவனின் கொடூர செயல்! பெண்களே உஷார்!

நார்மலாக ஒரு குடும்பம் என்றாலே குழந்தைகள் செய்யும் அடத்திற்கு எல்லாம் பெரியவர்கள் தான் பழியை ஏற்கும் நிலை இருக்கும்.  குழந்தைகள் அவர்களுக்கு தெரிந்து செய்கிறார்களோ, தெரியாமல் செய்கிறார்களோ, எல்லாவற்றுக்கும் அம்மாதான் காரணம் என்றும் சிலர் கூறுவது எல்லார் வீட்டிலும் சகஜம்தான். அதேபோல் குழந்தை படிக்கவில்லை என்றாலும், அதற்கும் அம்மாதான் காரணம் என்று பலரும் சுலபமாக சொல்லி விடுவார்கள்.

ஆனால் குழந்தை படிக்கவில்லை என்று அடித்ததற்காக ஆத்திரத்தில் கத்தியால் குத்துவது என்பது கொஞ்சம் மிகவும் பயங்கரமான செயல்தான். ஏன் இப்படி ஒரு கொடூரம் எல்லாம் நடக்கிறது? அதுவும் குழந்தைகளின் கண் முன்னாலேயே நடந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் மும்பை சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் அவினாஷ் வர்பே ஆவார். இவருக்கு 32 வயது ஆகிறது.

அவரது மனைவியின் பெயர் ஜெயஸ்ரீ. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எல்லார் வீட்டிலும் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டைகள் வருவது சகஜம்தான். அவர்கள் வீட்டிலும் அது பல நாட்கள் இருக்குமாம். அதுபோல் கடந்த திங்கட்கிழமை இரவு தனது குழந்தைகளுக்கு வீட்டுப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது குழந்தை சரியாக பாடம் படிக்காமல் இருந்ததன் காரணமாக ஜெயஸ்ரீ குழந்தையை அடித்து உள்ளார். அப்போது வீட்டில் கணவரும் இருந்துள்ளார். குழந்தைகளை அடிப்பதன் காரணமாக அவர் ஆத்திரமடைந்துள்ளார். அதன் காரணமாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதங்கள் ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போய் மனைவியை அவர் வீட்டில் இருந்த கத்தியை கொண்டு சரமாரியாக குத்தி உள்ளார். அதுவும் குழந்தைகள் கண்முன்னாலேயே இந்த சம்பவம் நடைபெற்றது. இதில் ஜெயஸ்ரீயின் கழுத்து மற்றும் வயிறு பகுதிகளில் அவர் பல முறை கத்தியால் குத்தி இருந்தார். அதன் காரணமாக ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து விட்டார்.

ஜெயஸ்ரீயின் அந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு முன்பே மனைவியை குத்தி விட்டேன் என்று கணவன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெயஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த கணவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.