கணவன் முன் விஷம் குடித்த மனைவி !! மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !

0
68

வெளிநாட்டில் பணிபுரியும் கணவருடன் வீடியோ கால் பேசியவாறு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அமராவதிவிளையை சேர்ந்த செல்வராஜ் (36) என்பவருக்கு, ஆக்னஸ் நந்தா (31) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. செல்வராஜ் என்பவர் ஓமன் நாட்டில் உள்ள எண்ணெய்க் கிணறு கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர்களுக்கு  நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர்.கணவர் வெளிநாட்டில் இருப்பதனால் தனது பெற்றோர் வீட்டில் ஆக்னஸ் நந்தா வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு இருந்தது .இதனால் நேற்றுமுன்தினம் கணவருடன் வீடியோ கால் இன் மூலமாக நீண்ட நேரம் பேசியுள்ளனர். மேலும்  வீடியோ காலில் பேசிக் கொண்டு இருக்கும்போது திடீரென தனது கையில் இருந்த பூச்சி மருந்து பாட்டிலை திறந்து ஆக்சிஸ் நந்தா , கணவனுக்கு பாய் பாய் சொல்லிவிட்டு வீடியோ காலில் விஷம் குடிக்கும்போது தனது இணைப்பைத் துண்டித்தார்.

தனது  மனைவி விஷம் கொடித்தனை கண்ட கணவர் செல்வராஜ், உறவினர்களிடம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து உறவினர்கள் அவர் அறைக்கு சென்று பார்த்த போது வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்குப் போராடிய ஆக்சிஸ் நந்தாவை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அச்சுகிராமம் காவல்துறையினர் அங்கு சென்று உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

author avatar
Parthipan K