மதுபோதையில் தகராறு செய்த கணவன்… கொலை செய்த மனைவி.. கோவை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

0
88

கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ரங்கன். இவருக்கு திருமணமாகி கோகுலஈஸ்வரி என்ற மனைவியும் 7 வயது மகளும் உள்ளனர். ஈஸ்வரி அங்குள்ள மரக்கடையில் வேளை செய்து வந்தார்.ரங்கனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

தினமும் மது அருந்திவிட்டு வந்த வீட்டில் உள்ளவர்களிடம் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ரங்கன் மது அருந்தி வீட்டிற்கு வந்த அவர் மனைவியுடன் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கோகுலஈஸ்வரி அவரை கொலை செய்யமுடிவு செய்து அவர் தூங்கும் போது தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலைமீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கோகுலஈஸ்வரியை கைது செய்தனர். அவர் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், மது போதையில் தினமும் தகராறு செய்து வந்ததால் அவரை கொலை செய்தேன் என தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.