கணவன் மனைவியை வேலைக்கு செல்ல சொன்னதனால் மனைவி தூக்கிட்டு தற்கொலை !!

0
61

சென்னை பல்லாவரம் பகுதியில் கப்பல் பொறியாளராக பணிபுரிந்து வருபவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கணவன் வேலையை இழந்ததால் மனைவியை வேலைக்கு செல்ல சொன்னதனால் மனைவி தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

சென்னை பல்லாவரம் அருகே உள்ள நாகல்கேணி பெரியார் நகரில் வசித்து வரும் ஜெயச்சந்திரன் என்பவர் மனைவி திவ்யா ,மற்றும் 7 வயது மகன் ,4 வயது மகனுடன் வசித்து வந்தார்.
ஜெயச்சந்திரன் என்பவர் தனியார் கப்பலில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக வேலையை இழந்து இரண்டு மாதமாக தவித்து வரும் ஜெயச்சந்திரன், அவரது மனைவியைத் திவ்யா என் கான் படிப்பு முடித்ததால், திவ்யாவை வேலைக்கு அனுப்ப ஜெய்சந்திரன் முயன்றுள்ளார்.

ஆனால் வேலைக்கு செல்வது குறித்து திவ்யாவிற்கு துளியும் விருப்பமில்லை என்பதனால், கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது .இதனைத்தொடர்ந்து நேற்று இரவு இருவருக்கும் சண்டை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் திவ்யா படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையறிந்த கணவன் ஜெயச்சந்திரன் ,உடனே கயிறை அறுத்து அவரை காப்பாற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ,அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து சங்கர் கோவில் காவல் துறையினர் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் திவ்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால்,வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினர் தரப்பில் திவ்யா உண்மையாகவே வேலைக்கு செல்ல பிடிக்காமல் தான் தற்கொலை செய்து கொண்டாரா ?அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா ? என்று பல கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மகள், மகன் இருவரையும் தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K