கணவன் இறந்ததால் மனைவி மகள்கள் அனைவரும் தற்கொலை !!

0
89

நாகர்கோயிலில் வசித்து வரும் தொழிலாளர், சமீபத்தில் இறந்த துக்கத்தில் மனைவி ,மகள்கள் அருகில் இருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோயில் ஒழுகினசேரி ஆராட்டு சாலை பகுதியில் சேர்ந்த வடிவேல் முருகன்(80) என்பவர் கூலித் தொழிலாளிசெய்து வருகிறார் .இவருக்கு பங்கஜம் (70) என்ற மனைவி மற்றும் மாலா (48) சச்சு (40) என்ற மகள்களும் இருந்தனர். இரண்டு மகள்களும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக சில மாதமாக வேலை இல்லாததால் வடிவேல் முருகன் தவித்து வந்துள்ளார்.மேலும், கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு வடிவேல் முருகன் கடந்த திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார்.

கணவன் இறந்த துக்கத்தில் மனைவி மற்றும் அவரது மகள்கள் வாழ வழியின்றி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.  சுதந்திரம் இனிய நாயர் குளத்தில் கைகளை கொடுத்தும், ஒருவருக்கொருவர் பாவாடை நாடாவில் கட்டிக்கொண்டு குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட முயன்றனர் முயன்றுள்ளனர்.

இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு சரியான நேரத்தில் தகவல் கொடுத்து அவர்களை மீட்க முயன்றனர் .இருப்பினும் 2 பேர் உயிரிழந்தனர் . சச்சு என்பவரை உயிருடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது.கணவனின் வருமானத்தை நம்பி வாழ்ந்த மனைவி மற்றும் குழந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K