பொது மக்களிடம் பேராதரவை பெற்ற திரெளபதி! பெரியாரிஸ்டுகள்! போலிப் போராளிகள்! புள்ளீங்கோ கதறல்!

0
88

பொது மக்களிடம் பேராதரவை பெற்ற திரெளபதி! பெரியாரிஸ்டுகள்! போலிப் போராளிகள்! புள்ளீங்கோ கதறல்!

தமிழ்ப் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், சமூகத்தில் நடந்த திட்டமிட்ட நாடக காதல் சம்பவங்களையும் மையப்படுத்தி உருவான திரைப்படமே திரெளபதி. இப்படத்தின் டிரெய்லர் கடந்த மூன்றாம் தேதி வெளியிடப்பட்டு பொது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

டிரெய்லர் வெளியிட்ட முதல் நாளே யூ டியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அனைத்து சமுதாய மக்களின் சார்பில் பலத்த ஆதரவை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்ட படம் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் வசனங்கள் பெண்களின் பாதுகாப்பை மையப்படுத்தி தெறிக்கவிடும் அளவிற்கு சமூக வலைதளங்களில் மீம்ஸ் வழியாக பிரதிபலிக்கிறது. ரஜினியின் தர்பார் படத்திற்கு கூட இவ்வளவு ஆதரவு இல்லை என்பதற்கு சமூகவலைதளங்களே சாட்சி.

விழுப்புரம், தருமபுரி, அரியலூர் போன்ற வடமாவட்டங்களில் திட்டமிட்டு நடந்த நாடக காதல் சம்பவங்களை வைத்து படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது என திரெளபதி திரைப்பட இயக்குனர் மோகன்.ஜி பேட்டியளித்துள்ளார்.

இப்படத்தின் வசனங்கள் எங்களை தாக்குவது போல் உள்ளதென்று சில புள்ளீங்கோ கதறுவதால் படத்தின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இணையத்தில் அடிக்கடி டிஷூம் டிஷூம் நடக்கிறது.

இப்படத்திற்கு எதிராக பெரியார் திராவிட கழகத்தின் தலைவர் கு.ராமகிருஷ்ணன் மற்றும் பெரியாரிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் இவர்களது தரப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளனர்.

இன்னொரு பெண்ணை ஏமாற்றிய பறையிசை பயிற்சி நடத்தும் சக்தி என்பவருக்கு உடுமலை கவுசல்யாவை இரண்டாவதாக சாதிமறுப்பு திருமணத்தை நடத்தி வைத்தவர்களில் கு.ராமகிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran