முதல் டெஸ்ட் யாருக்கு வாய்ப்பு:பண்ட்டா? சஹாவா?

0
89

முதல் டெஸ்ட் யாருக்கு வாய்ப்பு:பண்ட்டா? சஹாவா?

நியுசிலாந்து ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட்டுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது.

தோனியின் ஓய்வுகாலம் நெருங்கிய வேளையில் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேட வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி ஐபிஎல் கண்டுபிடிப்பான ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளித்தது. அவரும் முதலில் சிறப்பாக விளையாண்டாலும் அதன் பின் வரிசையாக சொதப்ப ஆரம்பித்தார்.

அதனால் முதலில் டெஸ்ட்டில் இருந்து அவர் தூக்கப்பட்டார். அதன் பிறகு டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தலையில் அடிபட்டதால் தொடரில் இருந்து விலகினார். அதனால் பகுதிநேரக் கீப்பரான ராகுல் அந்த பொறுப்பை ஏற்றார். இரு போட்டிகளிலும் சிறப்பாக பேட் செய்து கீப்பிங்கும் செய்தார். இதனால் அவரேக் கீப்பாராக தொடர்வார் என பேச்சுகள் எழுந்துள்ளன.

இதுபற்றி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேள்வி எழுப்பியபோது ‘அணித் தேர்வு என்பது கேப்டனும் தேர்வுக்குழு தலைவர்களும் முடிவு செய்ய வேண்டியது. அதனால் பண்ட் விளையாடுவதும் விளையாடாமல் போவதும் விராட் கோலி எடுக்கும் முடிவு’ என சொல்லியுள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக விக்கெட் கீப்பராக இருக்கும் சஹாவின் ஆட்டத்திறனும் சிறப்பாக இல்லை. நேற்று முடிந்த நியுசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 65 பந்துகளில் 70 ரன்களை சேர்த்து சிறப்பாக விளையாடினார். இதனால் தொடங்க இருக்கும் நியுசிலாந்து அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் இருவரில் யார் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவார்கள் என்ற குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் அணியில் ராகுல் என்னும் தற்காலிக விக்கெட் கீப்பரும் இருப்பதால் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. எப்படியாகினும் பண்ட்டுக்கு மேலும் சில வாய்ப்புகள் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

author avatar
Parthipan K