ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் யார் கேப்டன்?… இந்த மூவருக்குதான் அதிக வாய்ப்பு!

0
74

ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் யார் கேப்டன்?… இந்த மூவருக்குதான் அதிக வாய்ப்பு!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று சொல்லப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா களத்தில் பேட்டிங் செய்யும் போது காயம் அடைந்தார். ரோஹித் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார், ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தசைப் பிடிப்பு காரணமாக வெளியேறியதாக சொல்லப்படுகிறது. ரோஹித் ஸ்டிரைக் எடுக்கவிருந்தபோது, ​​இந்திய பிசியோ கமலேஷ் ஜெயின் மைதானத்திற்கு ஓடி வருவதை கேமரா காட்டியது, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, ரோஹித் அவரது முதுகைப் பிடித்துக் கொண்டு வெளியேறினார்.

இந்நிலையில் ஆசியக்கோப்பையைக் கணக்கில் கொண்டு ரோஹித் ஷர்மா அடுத்த இரு போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொள்வார் எனத் தெரிகிறது. அப்படி அவர் விலகும் பட்சத்தில் அடுத்த இரு போட்டிகளுக்கும் யார் கேப்டனாக செயல்படுவார் என்று கேள்வி எழுந்தது.

அந்த பட்டியலில் மூன்று இந்திய வீரர்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய மூவருக்கும்தான் அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஹர்திக் பாண்ட்யாவுக்குதான் அதிக வாய்ப்பு உள்ளதாக சொலல்ப்படுகிறது. ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஐபிஎல் தொடரில அவர் கேப்டனாக செயல்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. அதே போல இந்தியாவுக்காகவும் அவர் சில போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு சிறப்பாகவும் தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தினார்.