ஊரடங்கு தளர்த்தப்பட்டால்!- எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

0
74

உலக அளவில் கொரோனா நோய்த் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகத்தில் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை இன்னும் முழுவதுமாக தளர்த்தவில்லை. கடந்த மூன்று மாதங்களாக உலகம் முழுவதும் இதே நிலை தான் நீடிக்கிறது.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும் என உலக சுகாதார நிறுவமன் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் ஆரோக்கிய அவசரநிலை பிரிவு செயல் தலைவரான மைக்கல் ரேயான் “கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 55 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. 3.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் சில நாடுகளில் கொரோனா தொற்று இறங்குமுகமாக உள்ளதால், முற்றிலும் ஒழிந்து விடும் என நாம் ஊகிக்க வேண்டாம்.

கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக ஒழியாத நிலையில், அது மீண்டும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே அதன் இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.” என்று கூறியுள்ளார்.

author avatar
Parthipan K