விண்ணைத்தாண்டி வருவாயா-II  படத்தில் யார் ஹீரோ? 

0
109
Who is the hero of 'Vinnaithandi Varuvaya-II'?
Who is the hero of 'Vinnaithandi Varuvaya-II'?

விண்ணைத்தாண்டி வருவாயா-II  படத்தில் யார் ஹீரோ?

விண்ணைத்தாண்டி வருவாயா 2011ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் நாடக திரைப்படமாகும். இப்படத்தை எழுதிய இயக்கியவர் கௌதம் மேனன். தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் ரசிக்கும் படங்களில் ஒன்றாக இருக்கிறது விண்ணைத்தாண்டி வருவாயா. இதில் சிம்பு மற்றும் திரிஷா ஆகிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பு பெற்று நல்ல வெற்றியை பதிவு செய்தது.

ஆனால் இந்தத் திரைப்படம் சிம்புக்கு வருவதற்கு முன் இரண்டு ஹீரோக்களிடம் சென்று வந்துள்ளதாம். முதல் ஹீரோ தனுஷ். அவரிடம் இந்த கதை பற்றி கூறிய பின் இந்தப் படத்தில் நெகட்டிவ் கிளைமாக்ஸ் காணத்தால் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி தனுஷ் விலகி விட்டாராம். இதில் தனுஷ் கூறியதை பற்றி கௌதம் மேனன் ஒரு போட்டியில் குறிப்பிட்டிருந்தனர். அதுபோல நடிகர் ஜெய்க்கு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் நடக்க முடியாமல் போய்விட்டது. இதனை ஜெய் ஒரு பேட்டியில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

சிம்பு நடிப்பில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் தயாரானது. அதில் யார் ஹீரோவாக நடிப்பது என்று கேள்வி எழுந்துள்ளது. அப்போது மாதவன் பெயர் அடிபட்டது. மாதவன் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டு பாகம் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் கூட வைரலாக பரவியது. அதுபோல விண்ணைத் தாண்டி வருவாயா இரண்டு பாகம் விஜய் சேதுபதியிடன் கதை சொல்லப்பட்டது. ஆனால் அவர் தனக்கு இது செட் ஆகாது என்று மறுத்துவிட்டார். இந்த தகவல் யூட்யூப் தளத்தில் வெளியானது.

author avatar
CineDesk