Connect with us

Breaking News

“பூம்ரா உடல்நிலை பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது…” பிசிசிஐ சொன்ன அப்டேட் இதுதான்!

Published

on

“பூம்ரா உடல்நிலை பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது…” பிசிசிஐ சொன்ன அப்டேட் இதுதான்!

நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் பூம்ரா இல்லை.

Advertisement

கடந்த மாதம் ஆசிய கோப்பைக்கு முன்னதாக பும்ரா முதுகில் காயம் அடைந்ததால், அந்த தொடரை தவறவிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு தொடருக்கு அவர் திரும்பினார், ஆனால் மீண்டும் காயம் ஏற்பட அவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, பூம்ரா விஷயத்தில் அணி நிர்வாகம் பொறுமையாக இருக்க விரும்புவதாகவும், முந்தைய முறை டி 20 உலகக் கோப்பையை அவர்கள் செய்ததைப் போல அவசரப்பட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது குறித்து பேசும் போது “அவர் விரைவில் திரும்பி வருவார். விரைவில் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவோம் என்று நம்புகிறேன். டி20 உலகக் கோப்பைக்கு முன் நாங்கள் ஜஸ்பிரித் பும்ராவை அவசரப்படுத்தினோம், என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். எனவே நாங்கள் இப்போது பொறுமையாக இருக்க விரும்புகிறோம். மருத்துவக் குழு அவரை நன்றாக கவனித்து வருகிறது. தற்போது, ​​பும்ராவை சேர்ப்பதில் நாங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கிறோம். நாங்கள் ஒரு வீரருக்கு ஓய்வு அளிக்கும்போது, ​​அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும்,” என்று பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement