என் மனைவி மதம் மாறிவிட்டால் என்ன செய்வது! எனவே நான் இப்படி செய்கிறேன்! குடும்பத்தை கொலை செய்த ஓட்டுனர்!

0
105
What to do if my wife converts! So I do this! The driver who killed the family!
What to do if my wife converts! So I do this! The driver who killed the family!

என் மனைவி மதம் மாறிவிட்டால் என்ன செய்வது! எனவே நான் இப்படி செய்கிறேன்! குடும்பத்தை கொலை செய்த ஓட்டுனர்!

பாகல்கோட்டை மாவட்டத்தில் பீலகி தாலுகா கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ். 30 வயதான இவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இருபத்தி ஆறு வயதாகும் இவர் ஒரு இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு சப்னா மற்றும் சமர்த் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் தட்சிண கன்னடா மாவட்டம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நாகேஷ் மற்றும் விஜயலக்ஷ்மி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 20 நாட்களுக்கு முன்பு நாகேஷ் தன் மனைவி விஜயலட்சுமி காணவில்லை என்றும், மாயமாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடித்து தாருங்கள் என்றும் போலீசில் புகார் அளித்திருந்தார்.

அதன் பெயரில் போலீசாரும் விஜயலட்சுமியை தீவிரமாக தேடிவந்தனர். தன்னை தேடுவதை அறிந்த விஜயலட்சுமி காவல் நிலையத்திற்கு வந்தார். அதன் பிறகு திரும்பவும் கணவருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை விஜயலட்சுமி வேலைக்கு செல்லாத காரணத்தினால் அவருடைய செல்போன் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.

ஆனால் யாரும் எடுத்து பேசவில்லை என்று தெரியவந்தது. மேலும் நேற்று காலை அவர்களின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாத காரணத்தினால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கதவை நீண்ட நேரமாக வெளியிலிருந்து தட்டினர். ஆனால் எவ்வித பதிலும் அந்த வீட்டில் இருந்து வரவில்லை. அதன் காரணமாக ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது நாகேஷ் பிணமாக தொங்கினார் என்றும், விஜயலட்சுமி மற்றும் குழந்தைகள் வாயில் நுரை தள்ளி அங்கேயே இறந்து கிடந்தனர் என்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் காரணமாக மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் மற்றும் பாண்டேஸ்வரர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதன்பின் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு போலீசார் உள்ளே சென்றனர். அதைத் தொடர்ந்து நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய விசாரணையில் குழந்தைகள் மற்றும் மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு நாகேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்தது.

ஆனால் அதற்கான காரணம் எதுவும் அப்போது தெரியவில்லை. அதைத் தொடர்ந்து நாகேஷின் அறையில் தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் நாகேஷ் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் இவ்வாறு தெரிவித்தனர். எனது மனைவியும், நூர்ஜகான் என்ற வேற்று மதத்து பெண்ணும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர்.

என்னுடைய மனைவியை அந்தப் பெண் அவர்களது மதத்திற்கு மாற்ற முயற்சி செய்து வருகிறார். மேலும் சில நாட்களாகவே எனது மனைவியின் நடவடிக்கைகளிலும் மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டது. எங்கே அவர் அந்த மதத்திற்கு மாறி விடுவாரோ என்ற பயத்தில் நான் மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டேன். மேலும் நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அதன் காரணமாக கைப்பற்றிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த தோழி நூர்ஜகானிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இப்படி ஒரு காரணத்திற்காக மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று தானும் தூக்கில் தொங்கியது மங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.