காலையில் வெறும் வயிற்றில் தேன் சாப்பிடுவதால் என்ன நடக்கும்?

0
85

ஆரோக்கியத்திற்காக 2 தேக்கரண்டி தேனுக்கு பின்னால் உள்ள ஒரு அறிவியலை உங்களுக்கு விளக்க முயற்சி செய்கிறேன்.

வயிறு இரவு முழுவதும் ஓய்வெடுத்து பசியுடன் இருக்கிறது. நீங்கள் முதலில் காலையில் உடலுக்கு என்ன கொடுக்கிறார்களோ அதை முடிந்தவரை அதனை ஒருங்கிணைக்க முயற்சிக்கும்.

எனவே காலையில் உண்ணும் உணவு என்ன என்பதைப் பற்றி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் இந்திய பழக்கவழக்கங்களில் கெட்ட பழக்க வழக்கமாக குறிப்பாக தேநீர் மற்றும் காபி அதிகாலையில் பார்க்க முடிகிறது.

தேநீர் மற்றும் காபி ஆகியவை உடலுக்கு சூடு அதுமட்டுமில்லாமல் எடை அதிகரிக்கும். 100 ஆண்டுகளுக்கு முன்புவரை தேனீர் மற்றும் காபியை இந்திய உணவுகளில் பார்க்க முடியாது ஆனால் இன்று அந்தப் பழக்கம் வந்துள்ளது.

உடலின் எடை அதிகரிப்பதால் பாதிக்கப்படுபவர்களுக்கு 2 தேக்கரண்டி இயற்கைத் தேனை மிதமான சூடான எலுமிச்சை தண்ணீர் உடன் வெறும் வயிற்றில் உட்கொள்வதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். இது உடலை ஹைட்ரேட் செய்கிறது. அதே போல் மலச்சிக்கலை நீக்குகிறது.

இப்பொழுது ஒரு மனிதர் தனது வயதானால் உடல் நீர்சத்தை இழக்கிறார்கள். அப்பொழுது ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு சிறந்த வழியாக இருக்கும். இது உடலுக்கு நீர் சத்தை தருகிறது. எனவே இது ஒரு சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக பயன்படுகிறது.

ஆப்பிள் சீடர் வினிகர் இரண்டு தேக்கரண்டி மற்றும் 2 தேக்கரண்டி இயற்கை தேன் இவற்றை கலந்து காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது உடல் எடையை குறைக்கும் அதிசயத்தை காண்பீர்கள்.

உடல் எடை அதிகரிக்க முடியவில்லையே என்று ஏங்கும் மக்கள் ஒரு கிளாஸ் பால் 2 தேக்கரண்டி தேனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை ஏறும். அனைத்து நோய்களையும் நிர்வகிப்பதில் தேன் முக்கிய பங்கு வகிக்கின்றது.

எனவே தேன் ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் பயன்படுகிறது.

author avatar
Kowsalya