சாமி தரிசனத்திற்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமை! பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

0
85
What happened to the family who went to Sami Darshan! The car overturned in the ditch!
What happened to the family who went to Sami Darshan! The car overturned in the ditch!

சாமி தரிசனத்திற்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமை! பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை ஈபி காலனி இந்திராமுள்ள பெருமாள் கோவில் ரோடு பகுதியை சேர்த்தவர் கந்தசாமி (55). இவரது மனைவி மீனாட்சி (48). இவர்களுக்கு அருண் (28) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் ஐடி கம்பெனி வேலை செய்து வருகிறார். இவரத்தின்  மனைவி கீர்த்திகா (20). மேலும் கந்தசாமி, மீனாட்சி ,அருண், கீர்த்திகா  ஆகிய நான்கு பேரும் திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

மேலும் அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் காரில் சேலம் திரும்பி கொண்டிருந்தனர். அந்த காரை இயக்கி கொண்டிருந்தார். இன்று அதிகாலை மல்லூர் பிரிவு ரோடு சந்தியூர் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது கார் நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த மரத்தின் மீது பலத்தமாக மோதி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.

மேலும் அந்த விபத்தில் தாய் மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கார் இடுபாடுகளில் சிக்கிய கந்தசாமி மற்றும்  கீர்த்திகா இருவரும் உயிருக்கு போராடி வந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் கார் கண்ணாடியை உடைத்து கந்தசாமி மற்றும் கீர்த்திகா மீட்டு வந்து தீவிர சிகிச்சை அளித்தனர்.  பின்னர் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் இன்ஸ்பெக்டர் கலையரசி விசாரணை நடத்தி வருகிறார்.

author avatar
Parthipan K