தமிழக நிதிநிலை தொடர்பான விவகாரம்! பி டி ஆர் ஐ வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர்!

0
94

தமிழக நிதிநிலை குறித்து தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த கருத்து முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கின்ற அருகில் பொருளாதாரம் படித்தவருக்கு மக்கள் வாழ்க்கை தொடர்பாக தெரியுமா? ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு, உடை,இருப்பிடமாகும்.

கடந்த 15 மாத காலத்தில் நிதியமைச்சர் எத்தனை புதிய திட்டங்கள் மக்களுக்கு வாழ்வாதார திட்டங்கள், மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்கள், கல்வித் திட்டங்கள், வேலை வாய்ப்பு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம்.என்பதை பட்டியலிட்டு தெரிவித்தால் பொருத்தமாக இருக்கும். புரட்சித்தலைவி அம்மா தமிழகத்தில் உள்ள 2. 8 லட்சம் கோடி குடும்பங்களுக்கு மாதம் தோறும் அரிசி திட்டத்தை வழங்கினார்கள்.

அந்தத் திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் கடைசி வரையில் கொண்டு சென்றார் திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் கடைசி வரையில் வழங்கினார் எனக்கு தெரிவித்துள்ளார் ஆர். பி. உதயகுமார்.

37 லட்சம் முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு உதவி தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது கடந்த திமுக ஆட்சி காலத்தில் 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, ஆனாலும் அதிமுக ஆட்சிக் காலத்தில் 3000 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

எடப்பாடியார் கூடுதலாக 5 லட்சம் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்தார். இன்று மக்கள் மனு வழங்குகிறார்கள் அந்த மனுக்களுக்கு என்ன தீர்வு கிடைத்துள்ளது?

எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை தான் இன்று முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். வருவாய் பற்றாக்குறை தொடர்பாக அமைச்சர் விளக்கம் வழங்கியிருப்பது தெளிவாக தெரிகிறது.

சர்வாதிகார போக்கு என்று சொத்து வரி, மின்சார வரி, சாக்கடை வரியை உயர்த்திவிட்டு சர்வாதிகார போக்குடன் பதில் தெரிவிப்பதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மெத்தப் படித்தவருக்கு மக்களின் சமூக திட்டங்கள் தொடர்பாக தெரியவில்லை. இன்று ஒருபுறம் அனைத்து வசதிகளில் இருக்கின்ற உயர்ந்த மக்கள் இருக்கிறார்கள் மறுபடியும் அடிப்படை வசதி இல்லாமல் ஏழை, எளிய மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களை கரை சேர்ப்பதற்கு கடமையாற்ற நிதி கையாளப்படுகிறதா? என்றும், ஆர்.பி. உதயகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழக நிதிநிலை வீட்டுக்கு கணக்கு அல்ல செலவுகளை குறைக்க மக்களின் அடிப்படை தேவைகளை செய்து கொடுப்பது தார்மீக கடமையாகும் என தெரிவித்துள்ளார். மேலும் அதனை கேட்க எதிர்க்கட்சிக்கு தார்மீக உரிமையும் உண்டு என தெரிவித்துள்ள அவர், திட்டத்தை புரட்சித்தலைவர் தொடங்கி வைக்கும் போது அதற்கு பொருளாதாரத்தை காரணம் காட்டினார். தற்போது அந்தத் திட்டத்தால் கல்வி சதவீதங்கள் அதிகரித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

சென்ற தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் 525 தேர்தல் அறிக்கை விட்டார் அதில் பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய், எரிவாயு மானியம் 100 ரூபாய், பெட்ரோல் விலையை குறைப்போம் என்று தெரிவித்தார்.

ஆனாலும் இதுவரையில் எதுவும் செய்யவில்லை இருந்தும் நிதி அமைச்சர் சமூக பாதுகாப்பு திட்டத்தை நிறுத்தியதால் வேதனையும், கண்ணீரும் மக்களுக்கு வருகிறது என ஆர். பி. உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.