ஐஸ்வர்யா செய்த காரியம் !! லால் சலாம் படப்பிடிப்பில் இருந்து கடுப்பில் கிளம்பிய ரஜினி!!

0
181
What Aishwarya did!! Rajini left the shooting of Lal Salaam in a hurry!!
What Aishwarya did!! Rajini left the shooting of Lal Salaam in a hurry!!

ஐஸ்வர்யா செய்த காரியம் !! லால் சலாம் படப்பிடிப்பில் இருந்து கடுப்பில் கிளம்பிய ரஜினி!!

நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தனுசை வைத்து 3 என்கிற படமும், கெளதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கி உள்ளார். தற்போது இவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர். ரகுமான்  இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் “மொய்தீன் பாய்” என்கிற கதாபாத்திரத்தில்  நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் திருவண்ணாமலையில் தொடங்கியது.

இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கும் எனவும், அங்கு நடக்கும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என அறிவித்து இருந்தனர். ஏற்கனவே லால் சலாம்  படத்தின் ரஜினியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மோசமாக எடிட் செய்து வெளியிட்டு இருந்தார்கள். இதுவே ரஜினியை அப்செட் ஆக்கியது. இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் மும்பையில் படமாக்க தொடங்கினார்.

அதற்காக ரஜினி மும்பை கிளம்பி சென்றார். அங்கு 2  வாரங்கள்  படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் ரஜினி 5 நாட்களிலேயே சென்னை திரும்பி விட்டார். காரணம் 3 நாட்கள் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. நான்காவது நாள் ரஜினி படப்பிடிப்பிற்கு வந்தாலும், அவருடன் நடிக்கும் நடிகர் வராததால் படப்பிடிப்பு நடைபெறவில்லை.

அடுத்த நாளும் இதே போன்று நடைபெற்றதால் , ரஜினி சென்னை திரும்பி வந்து விட்டார். மேலும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையிலேயே செட் போட்டு படமாக்க ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா மீது கோபமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
CineDesk