இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !! 

0
58

மயிலாடுதுறை மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வருடமாக கணவனை பிரிந்து வாழ்ந்த பெண், மீண்டும் சேர்ந்து வாழ்ந்த நான்கு நாட்களிலேயே வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் மெடிக்கல் கடை ஒன்றினை நடத்தி வந்தார்.இவருக்கு திருவாரூர் மாவட்டத்தில் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் காயத்ரி என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் 3 மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே வேல்முருகனின் மெடிக்கல் கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது . மேலும் வேல்முருகன் அவ்வப்போது போதை ஊசி போடும் பழக்கம் உள்ளதாகவும் சைக்கோ தனமாக நடந்து கொள்வதாகவும் ,காயத்ரி தன் பெற்றோரிடம் தெரிவித்து வேல்முருகனை பிரிந்து தன் தாய் வீட்டில் மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் காயத்ரி வீட்டிற்கு சென்ற வேல்முருகன் காயத்ரியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துவந்தார். நேற்று காலை காயத்ரி அந்த வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் காயத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயத்ரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவரது தந்தை வேல்முருகனின் ராஜலட்சுமி மற்றும் வேல்முருகன் சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடத்தி வந்த நிலையில் காயத்ரியின் உறவினர்கள் ராஜலட்சுமியின் குடிசை வீட்டை தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் டிவி,பீரோ உள்ளிட்ட பல பொருட்கள் எரிந்து நாசமாகியது. இச்சம்பவம் குறித்து செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

author avatar
Parthipan K