மூன்றே நாட்களில் ரத்த அழுத்தம் குறைய வேண்டுமா? பூண்டு மட்டும் இருந்தால் போதும்!

0
173
#image_title

மூன்றே நாட்களில் ரத்த அழுத்தம் குறைய வேண்டுமா? பூண்டு மட்டும் இருந்தால் போதும்!

தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு இந்த ரத்த அழுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரத்த அழுத்தத்தில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று லோ பிபி , ஹை பிபி பொதுவாக ஒருவருக்கு பிபி என்பது 80க்கு 120 இருக்க வேண்டும். ஒருவருக்கு லோ பிபி இருந்தால் அவருக்கு பிபியின் அளவு 90க்கு 60 இருக்கும். இதனை தான் லோ பிபி என்கிறோம்.

லோ பிபி உள்ளவர்கள் காலை உணவை தவிர்க்காமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதன் அறிகுறியாக தலைச்சுற்றல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும் இது இதயத்திற்கு தேவையான ரத்தம் சரிவர செல்லாததால் ஏற்படுகிறது. ஹை பி பி என்பது 140 க்கு 90 இருக்கும். இந்த ஐபிபி உள்ளவர்களுக்கு தலைவலி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இதனை எவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்வது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் ஆறு பல் பூண்டு இந்த பூண்டில் ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றலும், கெட்ட கொழுப்பை வெளியேற்றும் ஆற்றலும் அதிகமாக இருக்கிறது. 200 எம்எல் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் எடுத்து வைத்துள்ள பாலில் இந்த ஆறு பல் பூண்டை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். கொதித்த பாலில் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கொதித்த பிறகு அதனை வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் பிறகு இரவு தூங்கும் போகும் முன் குடித்தால் மூன்றே நாட்களில் ரத்த அழுத்தம் குணமாகிறது. சர்க்கரை உள்ளவர்கள் இந்த பாலில் எந்தவிதமான இனிப்பையும் சேர்க்காமலும் குடிக்கலாம்.

author avatar
Parthipan K