ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா? தினமும் ஒரு டீஸ்பூன் நெய்!

0
200
#image_title

ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா? தினமும் ஒரு டீஸ்பூன் நெய்!

ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும். இவை வயது முதிர்ந்தவர்களுக்கு ஞாபக சக்தி குறைந்து விடும் ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு ஞாபக சக்தி குறைகிறது. இதனை எவ்வாறு ஞாபக சக்தி அதிகரிக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

அன்றாடம் வாழ்வில் நம் உடலுக்கு தேவையான அளவு நீர் அருந்துவதன் காரணமாக நினைவாற்றலை அதிகரிக்க செய்யும். துளசி இலைகளில் அதிக அளவில் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளது.தினசரி ஐந்து துளசி இலைகளை சாப்பிட்டு வருவதன் காரணமாக நம் ஞாபக சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும்.

வெண்டைக்காயை அதிகம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிஞ்சு வெண்டைக்காய்களை பச்சையாக சாப்பிட வருவதன் காரணமாகவும் நம் ஞாபக சக்தி அதிகரித்து கொள்ளலாம்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதைக்கி சிறிதளவு மிளகு சேர்த்து அதன் பிறகு தினசரி சாப்பிடும் உணவுகளுடன் இதனை சேர்த்துக் கொள்வதன் காரணமாக நம் நினைவற்றலை அதிகரித்துக் கொள்ளலாம்.

தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதன் காரணமாகவும் ஞாபக சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம் இதில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட்கள், இரும்புச் சத்து அதிகப்படியாக நிறைந்துள்ளது.

நம் தினசரி சாப்பிடும் உணவுகளுடன் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டு வருவதன் காரணமாக ஞாபக சக்தி அதிகரிக்க உதவும். பத்து பாதாம் பருப்பை இரவு உறங்குவதற்கு முன் ஊறவைத்து மறுநாள் காலையில் அதன் தோல் பகுதியினை நீக்கிவிட்டு சாப்பிட்டு வருவதன் காரணமாக நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கிறது அதனுடன் ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது.

author avatar
Parthipan K