ஒரே ஒரு இரவில் மருக்கள் உதர வேண்டுமா!! கோல்கேட் பேஸ்ட் போதும்!!

0
130
#image_title

ஒரே ஒரு இரவில் மருக்கள் உதர வேண்டுமா!! கோல்கேட் பேஸ்ட் போதும்!!

 

ஒரே ஒரு இரவில் நம் உடலில் இருக்கும் மருக்கள் மறைவதற்கு கோல்கேட் பேஸ்ட்டை பயன்படுத்தி எவ்வாறு மருக்களை வலிகள் இல்லாமல் மறைய வைப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…

 

* கோல்கேட் பேஸ்ட்

* சின்ன வெங்காயம் அல்லது பல்லாரி வெங்காயம்

* பூண்டு

 

தயார் செய்யும் முறை…

 

ஒரு சிறிய பாத்திரம்(Bowl) எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரை டிஸ்பூன் பேஸ்ட் சேர்த்துக் கொள்ள வேண்டும். பல் துலக்கும் பேஸ்ட் எது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பேஸ்டுடன் சிறிதளவு தண்ணீர் அதாவது அரை டிஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

 

அடுத்து இதில் சிறிய வெங்காயம் அல்லது பல்லாரி வெங்காயத்தின் தோலை உரித்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பின்னர் நான்கு பூண்டுகளை தோலை நீக்கி எடுத்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீர் இல்லாத மிக்ஸி ஜார் எடுத்து அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் இரண்டு டேபில் ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து இதை நன்கு கட்டியான பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பின்னர் அரைத்து வைத்துள்ள இந்த வெங்காயம் பூண்டு கலவையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதன் சாறு மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு இந்த வெங்காய பூண்டு சாறை பேஸ்டில் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். மருக்களை நீக்கும் மருந்து தயாராகி விட்டது.

 

இதை பயன்படுத்தும் முறை…

 

நாம் இந்த மருந்தை காது குடைவதற்காக வைத்துள்ள பட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பட்ஸ் பயன்படுத்தி இந்த மருந்தை தொட்டு மருக்கள் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். இந்த மருந்தை தொடர்ந்து மூன்று நாட்கள் நாம் பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும்.