உங்கள் வீட்டில் அதிசயங்கள் நிகழ வேண்டுமா? கடுகை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறுங்கள்!

0
172

உங்கள் வீட்டில் அதிசயங்கள் நிகழ வேண்டுமா? கடுகை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறுங்கள்!

 

 

நாம் சமைக்கும் பொழுது இந்த பொருட்கள் இல்லையென்றால் சமையலே கிடையாது என கூறலாம். அந்த பொருள் கடுகு. கையில் வைத்து ஒரு மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும் அதன் பிறகு நிகழும் அதிசயத்தை நாம் காணலாம். இப்பொழுது நன்மை செய்பவர்களை விட தீமை செய்பவர்களே அதிகம் உருவாகியுள்ளனர். அந்த வகையில் பில்லி , சூனியம் போன்றவை செய்பவர்கள்  நம் கையில் இருந்து கடுகை வாங்கினால் போதும் நம் குடும்பத்தையே சிதைத்து விடுவார்கள்.

குடும்பத்தில் எப்பொழுதும் அபசகுனமான வார்த்தைகள் தொடர்ந்து உபயோகப்படுத்தப்படுகின்றது அல்லது வீட்டின் கதவை திறந்தாலே துர்நாற்றம் வீசுகின்றது மற்றும் பணம் கரைந்து கொண்டே இருக்கின்றது என்றால் அதனை சரி செய்ய தேவைப்படுவது வெண்கடுகு அல்லது கடுகு எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் வாசலின் முன்பு நின்று கொள்ள வேண்டும். சிறிதளவு கடுகு எடுத்து அதனை மார்பிற்கு நேராக வைத்துக் கொள்ள வேண்டும். அதனையடுத்து மனதில் ஓம் கிரீம் நமோ சப்த சரிக பத்த ஸ்வாகா என்ற மந்திரத்தை 108 முறை மனதில் ஜபிக்க வேண்டும்.

அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கையில் வைத்துள்ள கடுகை தண்ணீரில் கரைத்து விட்டு அதனை வீட்டில் உள்ள செடியில் ஊற்ற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஏழு நாட்கள் செய்யும் பொழுது வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்வதை நாம் அறியலாம்.

author avatar
Parthipan K