ஆண்மை குறைவுக்கு முழுமையான தீர்வு வேண்டுமா!! வயாகராவை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த மூலிகை!!

0
265
#image_title

ஆண்மை குறைவுக்கு முழுமையான தீர்வு வேண்டுமா!! வயாகராவை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த மூலிகை!!

 

ஆண்மை குறைவு பிரச்சனையை சரி செய்ய வயாகரா மாத்திரையை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த அபூர்வ மூலிகை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த மூலிகையை பயன்படுத்தி ஆக்சிஜன் பற்றாகுறையை கூட சரி செய்யலாம். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை போதை பழக்கத்திலிருந்து விடுபடவும் இந்த மூலிகையை பயன்படுத்தலாம். மேலும் பல பிரச்சனைகளுக்கு இந்த மூலிகையை மருந்தாக பயன்படுத்தலாம். அந்த மூலிகை என்ன எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

ஆண்மை குறைவு பிரச்சனையை சரிசெய்ய, குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட நாம் பயன்படுத்தப் போகுதம் அந்த மூலிகை முருங்கை விதை மட்டும் தான். முருங்கை விதை பலவிதமான சத்துக்களை கொண்டது. முருங்கை விதை என்னென்ன நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

 

முருங்கை விதை குணப்பத்தும் நோய்கள்…

 

* இந்த முருங்கை விதையை தினமும் எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடலுக்குள் நல்ல காற்றை மட்டுமே உள்ளே எடுத்துச் சொல்லும்.

 

* முருங்கை விதையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்புகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். இதனால் ஆண்மை குறைவு பிரச்சனை சரியாகும்.

 

* முருங்கை விதையை தினமும் தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும். நினைவாற்றல் பெருக வேண்டுமென்றால் முருங்கை விதையுடன் வாழைத் தண்டையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

 

* போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் முருங்கை விதையை தொடர்ந்து சாப்பிடும் பொழுது இது போதை பழக்கத்திலிருந்து விடுபட உதவி செய்கிறது. பீடி சிகரெட் பழக்கம் உள்ளவர்கள், கஞ்சா பழக்கம் உள்ளவர்கள் மற்ற போதைப் பொருள் பழக்கம் உள்ளவர்கள் எல்லாரும் போதை பழக்கத்திலிருந்து விடுதலை பெற மருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிடலாம்.

 

* நகம் உடைதல் பிரச்சனை உள்ளவர்கள் முருங்கை விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் நகத்திற்கு தேவையான பலம் கிடைக்கும். நகம் இரும்பு போல இருக்கும்.

 

* ஒரு சிலருக்கு நகங்களில் கருப்பு கருப்பாக புள்ளிகள் இருக்கும். அதை நீக்க இந்த முருங்கை விதையுடன் கத்தரிக்காய் ஜூஸை கொடுத்தால் நகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். அது மாதிரியே ஒரு சிலருக்கு நகத்தில் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் இருக்கும். அப்படி வெள்ளை நிறத்தில் உள்ள புள்ளிகள் மறைய முருங்கை விதையுடன் சேர்த்து கோவைக் காயை சேர்த்து சாப்பிட்டால் அந்த வெள்ளை நிற புள்ளிகள் மறையும்.

 

* கிட்டப் பார்வை தூரப்பார்வை பிரச்சனை உள்ளவர்கள் முருங்கை ஆயிலை வாங்கி பயன்படுத்தினால் அந்த கிட்ட பார்வை தூரப்பார்வை பிரச்சனை குணமடையும்.

 

* முருங்கை விதையை சாப்பிடும் பொழுது இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று மூன்று சுவைகளும் வரும்.

 

சாப்பிட்டு முடித்த பிறகு 5 நிமிடம் கழித்து நமக்கு கடைசியாக இனிப்பு சுவை வந்திருந்தால் உடலில் தசை சம்பந்தமான நோய்கள் உள்ளது என்று அர்த்தம்.

 

கடைசியாக கசப்பு சுவை வந்தால் இரத்தம் சம்பந்தமான நோய்கள் உள்ளது என்று அர்த்தம்.

 

அதுவே கடைசியாக துவர்ப்பு சுவை வந்தால் வயிறு சம்பந்தமான நோய்கள் உள்ளது என்று அர்த்தம்.

 

* சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் அதாவது சுவாசக் கோளாறு உள்ளவர்கள் முருங்கை விதையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் குணமடையும்.

 

* ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களும் தொடர்ந்து இந்த முருங்கை விதையை சாப்பிட்டு வரலாம். அவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது ஆஸ்துமா பிரச்சனை குணமடைகின்றது.

 

* காது, மூக்கு போன்ற இடங்களில் ஒரு சிலருக்கு அரிப்பு மாதிரி ஏற்படும். அந்த பிரச்சனையை சரிசெய்ய தினமும் முருங்கை விதையை சாப்பிட்டு வர வேண்டும்.

 

* இந்த முருங்கை விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுதல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

 

* சர்க்கரை நோயாளிகள் இந்த முருங்கை விதையை சாப்பிடும் பொழுது அடிக்கடி சிறுநீர் போவது கட்டுப்படுகிறது.

 

* மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் இந்த முருங்கை விதையை தொடர்ந்து சாப்பிடும் பொழுது மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

 

ஆண்மை குறைவு பிரச்சனையை தீர்க்க…

 

முதலில் பீட்ருட் ஒன்றை எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு நாட்டு மாதுளம்பழம் எடுத்து தோலை உரித்து அதில் இருக்கும் பழங்களை எடுத்துக் கொள்ளவும்.

 

பீட்ரூட்டை சிறிது சிறிதாக நறுக்கி மிக்சியில் போட்டுக் கொள்ளவும். பிறகு இந்த மாதுளம் பழங்களையும் இதில் சேர்த்து அதனுடன் 100 மிலி அளவு பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த பிறகு தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு இதை குடித்து வர வேண்டும்.

 

அதனுடன் இந்த முருங்கை விதைகளையும் மூன்று வேலைகளிலும் அதாவது காலை, மதியம், இரவு என்று மூன்று வேலைகளிலும் தலா 10 முருங்கை விதைகளை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு பிரச்சனைக்கு அற்புதமான தீர்வு கிடைக்கும்.