லைகாவுக்கு 21 கோடி ரூபாய் கடன்… சொத்துகளை தாக்கல் செய்ய விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு!

0
81

லைகாவுக்கு 21 கோடி ரூபாய் கடன்… சொத்துகளை தாக்கல் செய்ய விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஷால் லைகா நிறுவனத்துக்கு 21 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். இது சம்மந்தமாக வழக்கு ஒன்று நடந்து வருகிறது.

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டானது. இவர் நடித்த செல்லமே, தாமிரபரணி, சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது ஆனால் ஒரு கட்டத்தில் டெம்ப்ளேட் படங்களில் சிக்கிக் கொண்டதால் அடுத்தடுத்து தோல்வி படங்களைக் கொடுத்து வருகிறார். கடைசியாக இவரின் ஹிட் படமாக இரும்புத்திரை திரைப்படம் அமைந்தது.

அதன் பின்னர் வந்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்விப் படங்கள்தான். இதற்கிடையில் அவர் தன் படங்களை தானே தயாரித்ததால் பெரும் பொருளாதார நஷ்டத்துக்கும் ஆளானார். இதற்காக அவர் அன்புச் செழியனிடம் 21 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கியுள்ளார். அதை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு விஷாலிடம் தேதி கேட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் விஷால் தொடர்ந்து தன்னுடைய படங்களை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இதனால் லைகா நிறுவனம் விஷால் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விஷால் தரப்பில் தன்னிடம் தற்போது அவ்வளவு பணம் இல்லை என்றும் தொழிலில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நீதிமன்றம் விஷாலிடம் அவருடைய சொத்து விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.