முதலில் குழந்தை, இப்போ திருமணம்!! காதல் ஜோடியின் கவனக்குறைவு விருத்தாச்சலத்தில் வியப்பு!!

0
138

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள கிராமத்தை 36 வயதான வேல்முருகன். இவர் அதே பகுதியில் உள்ள 27 வயதான சத்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் பலமுறை தனிமையில் இருந்துள்ளனர்.

மேலும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார் வேல்முருகன். இதன் விளைவாக சத்யா கர்ப்பமாகி உள்ளார். இதனை கேட்டு உறைந்து போனார் வேல்முருகன். மேலும், இப்போதைக்கு குழந்தை வேண்டாம். விபரீதம் ஆகிவிடும். அதனை கலைத்து விடலாம் எனக் கூறியுள்ளார்.

இதற்கு சத்யா உடன்படவில்லை. யாருக்கும் தெரியாமல் மறைத்து வந்துள்ளார். வயிறு காட்டிக் கொடுக்கவே அவரது குடும்பத்தினரிடம் தனக்கு நேர்ந்ததை தெரிவித்தார். காலம் கடந்து விட்டதால் அவரால் எதுவும் செய்ய இயலவில்லை.

இந்நிலையில் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையின் பிறப்பு பதிவுக்காக தந்தையின் பெயரை கேட்டுள்ளனர். அப்போதுதான் தான் திருமணமாகாதவர் என்றும், தனக்கு நேர்ந்த சம்பவத்தையும் சத்யா கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் சத்யாவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு வேல்முருகனை இடம் விசாரணையை தொடங்கினர். அப்போது, வேல்முருகன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதனால் காவல்துறையினர் வழக்குப் பதிவு எதும் செய்யாமல் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு ஒன்பது முப்பது மணி அளவில் ஊரார் முன்னிலையில் விருதாச்சலம் கொளஞ்சியப்பர் ஆலயத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

குழந்தை முன்னிலையில் திருமணம் நடந்ததால் ஊர்மக்கள் வந்து வாழ்த்தினர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

author avatar
Jayachithra