யுவராஜ் சிங் அனுப்பிய கடிதத்துக்கு விராட் கோலி அளித்துள்ள பதில்!

0
85

யுவராஜ் சிங் அனுப்பிய கடிதத்துக்கு விராட் கோலி அளித்துள்ள பதில்!

விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், விராட் நீ ஒரு மிகப்பெரிய கேப்டனாகவும், தலைவனாகவும் இருக்கிறாய். தற்போது வாழ்க்கையில் நீ புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஏனென்றால், இனி உன்னிடம் இருந்து வழக்கமான ரன் சேஸை எதிர்பார்க்கிறேன்.

ஒரு சக வீரராகவும், ஒரு நண்பராகவும் உன்னுடன் நிறைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதில் பெருமைப்படுகிறேன். நீ ஒரு சூப்பர் ஸ்டார். உனக்குள் இருக்கும் நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கட்டும். நாட்டை தொடர்ந்து பெருமைப்படுத்து. இவ்வாறு கோலிக்கு உருக்கமான கடிதத்தை யுவராஜ் சிங், அனுப்பி இருந்தார். மேலும், கோலிக்கு சிறப்பு வாய்ந்த கோல்டன் ஷு ஒன்றையும்  பரிசாக அனுப்பினார்.

இவ்வாறு யுவராஜ் சிங் அனுப்பிய உருக்கமான கடிதத்துக்கு விராட் கோலி பதில் அளித்துள்ளார். யுவராஜ் சிங் அனுப்பிய அந்த கடிதத்திற்கு விராட் கோலி அளித்துள்ள பதிலில், உங்களின் இந்த அற்புதமான கடிதத்துக்கு நன்றி. எனது கிரிக்கெட் பயணத்தில் முதல் நாளில் இருந்து பார்த்த ஒருவரிடம் இருந்து இந்த கடிதம் வந்திருக்கிறது. உங்கள் வாழ்க்கையும், நீங்கள் புற்று நோயில் இருந்து மீண்டு வந்ததும், கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் உத்வேகமாக இருந்தது.

நீங்கள் யார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நீங்கள் எப்போதும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்காக மிகவும் தாராளமாகவும், அக்கறையுடனும் இருப்பீர்கள். இந்த புதிய பயணத்தில் அனைத்து மகிழ்ச்சி, அழகான நினைவுகள் மற்றும் ஆசீர்வாதங்களை விரும்புகிறேன் என்று விராட், “யுவராஜ் சிங் அனுப்பிய கடிதத்துக்கு பதில் அளித்துள்ளார்”.

author avatar
Parthipan K