கருத்து மோதலால் கோபம் கொண்ட விராட்கோலி ! அடங்கி போன வேக பந்து வீச்சாளர்!!

0
70

விராட் கோலியுடன் மோதலா இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் கூறியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு ஜமைக்காவில் நடந்த ஆட்டத்தில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய கெஸ்ரிக் வில்லியம்ஸ் நோட்டு புத்தகத்தில் எழுதி அடிப்பது போல சைகை செய்து கோலியை வழியனுப்பி வைத்தார். களத்தில் ஆக்ரோஷத்திற்கு பெயர்போன விராட்கோலி இதை எளிதாக எடுத்துக்கொள்ள வில்லை

அதன் பிறகு 2019ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் டி20 விளையாடியபோது கடைசி போட்டியில் வில்லியம்ஸின் பந்தை விராட் கோலி சிதறடித்தார் அப்போது வில்லியம்ஸின் நோட்டுப் புத்தக கொண்டாட்டத்தை கோலி செய்து காட்டி பதிலடி கொடுத்தார் இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் வில்லியம்ஸ் தற்போது கூறியுள்ளார்.

ஜமைக்காவில் நான் முதன்முதலில் விராட் கோலியிடம் தான் அந்த நோட்டுப் புத்தக கொண்டாட்டத்தை ஆரம்பித்தேன் அது எனக்கு பிடித்ததால் ரசிகர்களுக்காக நான் அதை செய்தேன். ஆனால் நான் செய்ததை விராட் கோலி தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆட்டம் முடிந்ததும் அணியினர் இடம் கைகுலுக்க சென்றேன் விராட் கோலி நல்ல பந்து வீச்சு என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அவர் கடுமையாக நடந்து கொள்ளவில்லை ஆனால் அதோடு எங்கள் பேச்சு முடிந்துவிட்டது. 2019 டி20 தொடர் மூன்றாவது போட்டியின்போது விராட் கோலி ஆட்டத்தில் இறங்கியதுமே என்னிடம் நேராக வந்து அந்த அந்த நோட்டுப் புத்தக கொண்டாட்டம் இன்று இங்கு வேலை செய்யாது அதற்கு வாய்ப்பும் வராது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன் என்று என்னிடம் சொன்னார்.

அப்போதிலிருந்து நான் பந்து வீசி வரும் போது ஒவ்வொரு பந்துக்கும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தார் நான் நண்பா வாயை மூடி பேட்டிங் ஆடு நீ பேசுவது குழந்தைத்தனமாக உள்ளது என்றேன் ஆனால் அவர் காதில் விழுந்தது எல்லாம் வாயை மூடு என்பது மட்டுமே குழந்தைத்தனம் என்பது நான் பின்னால் நடந்து கொண்டே பேசியதால் அவர் காதில் விழவில்லை அவ்வளவுதான் நான் சொன்னேன் ஆனால் அவர் பேசிக்கொண்டே இருந்தார். அந்த ஆட்டத்தில் என் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார் நான் குழம்பி விட்டேன்எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் சரி சரியாகவில்லை என்று கூறினார். மேலும் இந்த சம்பவத்தால் தான் அவரால் அன்று என் பந்துவீச்சை விலாச முடிந்தது என்று வில்லியம்சன் கூறினார் அந்த போட்டியில் 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இந்திய அணி கோப்பையை வெல்லவும் காரணமாக இருந்தார் என்று நினைவு கூர்ந்தது.

author avatar
Parthipan K