வங்காளத்தில் வெடித்த வன்முறை! 20 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாகின!

0
79
Violence erupts in Bengal! Homes of 20 Hindus set on fire!
Violence erupts in Bengal! Homes of 20 Hindus set on fire!

வங்காளத்தில் வெடித்த வன்முறை! 20 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாகின!

வங்காள தேசத்தில் பல இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட மதம் சார்ந்து அவதூறு பரப்பியதாக சில தினங்களுக்கு முன்னதாக குமிலா என்ற இடத்தில் நவராத்திரியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜையின் பந்தல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்து கோவில்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன.

அதன் காரணமாக பதட்டமும், வன்முறையும் அங்கே பல இடங்களில் அரங்கேறியது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து அந்நாட்டு உள்துறை மந்திரி அசாதுஜமான் கான் கமல் இந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனடிப்படையில் வன்முறையாளர்கள் 100 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 வன்முறையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் 20 க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகளுக்கு வன்முறையாளர்கள் திடீரென்று தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அறுபத்தி ஆறு வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது. டாக்காவில் இருந்து 225 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரங்கபூர் என்ற கிராமத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. வங்காள அரசு கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்த போதும், இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து நடந்து வருகிறது வருத்தமளிக்கிறது.

பங்காள தேச சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவுடனான உறவை சேதப்படுத்தும் சதியின் ஒரு பகுதியாக அரங்கேறி உள்ளது என்று தான் நாம் நினைக்க தோன்றுகிறது. இந்த சம்பவங்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவங்கள் மீது வங்காள தேச அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என திரிபுரா முதல் மந்திரி  பிப்லாப் தேப் கூறியுள்ளார்.