பேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்? பிகிலே!

0
75

பேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்? பிகிலே!

தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமியை நாளை மாலை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் “யாரை எங்க உட்கார வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அவர்களை உட்கார வைத்தால் எல்லாம் சரியாக நடக்கும்” என்று அரசியல் பேசி சலசலப்பை ஏற்படுத்தினார்.
பேனர் விவகாரத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தது குறித்து ஆளுந்தரப்பை விமர்சித்துப் பேசினார், இதனால் ஆளும்தரப்பின் கடும் கோபத்திற்கு உள்ளானார்.

குறிப்பாக அவர் எடப்பாடி பழனிச்சாமி தான் பேசுகிறார் என்று அமைச்சர்கள் கொந்தளித்தனர், திரைப்பட விளம்பரத்தை மிகப்பெரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், என்று இதுபோல் பேசி வருவதாகவும்‌ கடுமையாக கண்டனம் தெரிவித்தனர் ஆளுந்தரப்பு.

இதனைத்தொடர்ந்து ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி தந்த சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தமிழக அரசு,

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டார்,
போன தீபாவளிக்கு நடிகர் விஜய்யை முதல்வரிடம் அழைத்து சென்று பேசவில்லை என்றால் மெர்சல் படம் வந்து இருக்காது. பரபரப்புக்காக படத்தினை ஓட்ட வேண்டும் என்பதற்காக தன்னையும் அறியமால் எதாவது பேசியிருப்பார் என்று, நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை படவிவகாரத்துக்காக சந்தித்ததை குறித்து அம்பலப்படுத்தினார்.

பின்பு என்ன நடக்கும், தமிழக அரசை பகைத்துக் கொண்டால் நடப்பது எல்லாம் நடந்து அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பிகில் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் அவர்களை ரத்த அழுத்தம் எகிறும் அளவுக்கு சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன,

தணிக்கை அதிகாரிகள் பிகில் திரைப்படத்தை தணிக்கை செய்ய காலம் தாழ்த்தினார்கள், பிறகு கல்பாத்தி அகோரத்தின் செல்வாக்கு மூலமாக படம் தணிக்கை செய்ய அனுமதிக்கப்பட்டது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது.

பின்பு,வழக்கம்போல் திருட்டு கதை சர்ச்சையில் சிக்கியது, பிகில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லி எனது கதையை திருடி படம் எடுத்துள்ளார் என்று உயர்நீதிமன்றத்தில் கே.பி.செல்வம் என்பவர் வழக்கு தொடர்ந்தார், என்ன நடந்தது என்று தெரியவில்லை, திடிரென வழக்கை வாபஸ் பெற்றார், வழக்கு முடிவுக்கு கொண்டு வந்து நிம்மதி அடைந்துள்ளார் தயாரிப்பாளர்.

இன்னும் பல எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும் என்பதால் ஆளும் தரப்பை சமாதானப்படுத்த தயாரிப்பு நிறுவனம் என்ன செய்வது நிற்கிறது,

முதல் அமைச்சரிடம் நேரடியாக நடிகர் விஜய் சந்திக்க வைத்து பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க தீவிரமாக முக்கிய புள்ளிகளை நாடி வருகிறது. நாளை மாலைக்குள் இந்த சந்திப்பு நிகழ்வு நடக்க வைக்க வேண்டுமென்று முடிவெடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

திரைப்படத்தில் தாங்கள் பெரிய மாஸ் ஹீரோ என்று காட்டிக்கொள்ளும் நடிகர்கள் பார்வையில், நிஜ வாழ்க்கையில் அரசியல்வாதிகள் தான் ஹீரோவாக ஜொலிக்கிறார்கள் என்று இந்த சம்பவம் வெளிப்படுத்தும் என்பது தெரியும்.

author avatar
Parthipan K