50 விஜய் புள்ளைங்கோவ அலாக்கா தூக்கிய போலீஸ்! பிகிலே காப்பாத்த வாங்க

0
102

50 விஜய் புள்ளைங்கோவ அலாக்கா தூக்கிய போலீஸ்! பிகிலே காப்பாத்த வாங்க

உலகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு வெளியான நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் 100 கோடி 200 கோடி வசூலித்தது என்று சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது, படம் வெளியான நாட்களிலிருந்து விஜய் ரசிகர்கள் தாம்தூம் என்று கொண்டாடி வருகின்றனர்.

விஜய் ரசிகர்களைத் தவிர வேறு யாரும் படத்தை அந்த அளவுக்கு படத்தை ரசிக்கவில்லை என்று தெரிகிறது, இயக்குனர் அட்லி என்றால் நான்கு படங்களை சேர்த்து வைத்து தன்னுடைய படைப்பு என்று சொல்லி படம் எடுத்துவிடுவார் என்பது உலகறிந்த உண்மை. படத்தை பார்த்தவர்கள் விஜய்க்காக ஒரு முறை பார்க்கலாம் என்றுதான் சொல்கிறார்களே தவிர, படத்தை தூக்கி வைத்துக்கொண்டு எவரும் பேசவில்லை,

படம் நெகட்டிவ் விமர்சனங்களாக வந்து கொண்டிருப்பதால் நடிகர் விஜய் நொந்து போயுள்ளார், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பெருமை நடிகர் விஜய்க்கு மட்டுமே உண்டு,. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆளும் தரப்பை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார், அதிலும் மறைமுகமாக யார எங்க உட்கார வைக்குனுமோ அவன அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாக நடக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சீண்டினார்,.

அதிலிருந்து சனி பிடித்ததோ என்னவோ தொடர்ந்து அடிமேல் அடி நடிகர் விஜய் வாங்கி வருகிறார்,. படத்திற்கு தணிக்கை செய்வதிலிருந்து நீதிமன்றம், முதல்வர் தரப்பு வரையும் தயாரிப்பு நிறுவனம் தான் போராடி படத்தை வெளிக்கொண்டு வந்தது என்பது பலருக்கும் தெரியாத உண்மை,. படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி தராமல் தயாரிப்பாளரையும் நடிகர் விஜய்யையும் திரையரங்க உரிமையாளர்களையும் கதற விட்டது ஆளுந்தரப்பு,.

தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் அவர்களின் செல்வாக்கின் மூலமாக முதல்வரை மறைமுகமாக தொடர்பு கொண்டு போராடி சிறப்பு காட்சிக்கு அனுமதி வாங்கினார், அத்துடன் முடிந்ததா! சிறப்புக் காட்சிக்கு அனுமதி வாங்கி படத்தை திரையிடுவதற்கு முன்பு பலத்த அடியை நடிகர் விஜய் சந்தித்தார்,.

கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை ஒளிபரப்பு காலம் தவறியதால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்து மிகப் பெரிய அளவில் அராஜகம் செய்தனர்., அங்குள்ள பேனர்களை கிழித்து கடைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள்,. அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை கலவரத்தில் ஈடுபட்டதால் அனைத்து தரப்பு மக்களையும் முகம் சுளிக்க வைக்கும் அளவில் நடந்த கொண்டனர்,.

படம் வெளியான பிறகு காவல்துறை ரோந்து வாகனத்தின் மீது வானவேடிக்கை பட்டாசுகளை கொளுத்தினார்கள்,. இதனால் காவல்துறையின் கடும் கோபத்திற்கு ஆளானார்கள் விஜய் ரசிகர்கள்,. இது சமூக வலைத்தளங்களை வைரலாகி அனைவரும் பார்வைக்கு சென்றது,. பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு அறிவுரை சொன்ன நடிகர் விஜய், தன்னுடைய பிகில் படத்திற்கு ரசிகர்கள் யாரும் தன்னுடைய படம் போட்டு பேனர் வைக்கவேண்டாம் என்று இதுவரையும் சொல்லவில்லை,. இந்த கேள்வியை அனைத்து தரப்பு மக்களையும் எழுப்ப வைத்ததில் நடிகர் விஜய் மட்டும் அவருடைய ‌ரசிகர்களையே சேரும்.

இந்த சூழ்நிலையில் கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட 50 விஜய் ரசிகர்களை அலாக்காக தூக்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது காவல்துறை,. இதில் 7 சிறுவர்களும் அடங்கும், அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்,. அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டதால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது,.

இதிலும் ஹைலைட்டாக பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி தரப்படவில்லை என்றால் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு புத்தூர் கட்டு, மாவு கட்டு போட வைப்போம் என்று சென்னையில் யூடியூப் சேனலில் விஜய் ரசிகர் பேசிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது,. கலக்கத்தில் மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்,. இப்படி அடுத்தடுத்து ஆளும் தரப்பை பகைத்துக் கொண்டு தனது ரசிகர்கள் செய்யும் செயலை கண்டிக்காமல் நடிகர் விஜய் என்ன செய்யப்போகிறார் என்று தமிழக மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது,.

மேலும் 50 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து குரல் எழுப்ப போகிறாரா? ஆதரவாக வழக்கறிஞர் குழுவை அனுப்பி வழக்கை முடித்து வைப்பாரா? கிருஷ்ணகிரிக்கு சென்று அவர்களின் வீடுகளுக்கு சென்று நிதி உதவி கொடுப்பாரா? என்று விஜய் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்,.

திரையில் நாம் மாஸ் ஹீரோ என்று எண்ணி கொண்டிருந்தவர்கள் பிகில் திரைப்பட விஷயத்திற்கு பிறகு திரையில் மட்டும் தான் நாம் ஹீரோ! நிஜத்தில் அரசியல்வாதிகள் தான் ஹீரோ என்பதை அறிவார்கள்.

author avatar
Parthipan K