காதலை தொடங்கும் முன் சபரிமலை சென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன்

0
60

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய ’தானா சேர்ந்த கூட்டம்’ என்ற திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்

\காற்றுவாக்கில ரெண்டு காதல்\ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தாவும் நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லலித் என்பவர் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நல்லபடியாக முடிய வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டு சபரிமலையில் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
CineDesk