இயற்கை எய்தினார் முக்கிய கட்சியின் நிர்வாகி! தலைவர்கள் இரங்கல்!

0
99

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் இற்கு சென்ற எட்டாம் தேதி நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது என அண்மையில் தகவல் கிடைத்தது.இதுபோன்ற சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் சிகிச்சை பலனில்லாமல் நேற்றையதினம் இயற்கை எய்தினார். அவருடைய உடல் கேகே நகரில் இருக்கின்ற அவருடைய இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அவருடைய மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முகமது யூசுப் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் திரு முகமது யூசுப் அவர்களின் மரணச் செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.

 

அத்துடன் அவர் இனிமையாகப் பழகி அனைவரிடமும் நட்புடன் இருக்க கூடியவர் அவருடைய மறைவால் வாடிக்கொண்டிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் மற்றும் அன்பு சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில், யூசுப் அவர்களின் மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருக்கின்ற இரங்கல் செய்தியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. என்னை குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர் என் மீது மாசிலா அன்பைப் பொழிந்தவர் மீண்டு வருவார் என்று நம்பிக்கொண்டிருந்தேன் மனம் பதைக்கிறது.ஈடு செய்ய இயலாத இழப்பு என்று பதிவிட்டு இருக்கிறார் அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்.