என் ஐ ஏ சோதனை! மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்!

0
88

சமீப காலமாக மத்திய பாஜக அரசு தேசிய திறனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை உரித்தவற்றின் மூலமாக இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் சோதனை என்ற பெயரில் அவர்களை அச்சுறுத்தி வருகிறது.

எஸ் டி பி ஐ பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வந்த அமைப்புகள் மக்களாட்சி முறையில் வெளிப்படையாக இயங்கி வரும் அமைப்புகள் ஆகும். இந்த அமைப்பில் இந்துக்கள் போன்ற மற்ற மதத்தினரும் நிர்வாகிகளாக இருக்கிறார்கள்.

அவசர உறுதிகள் மூலமாக பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் உதவி செய்வது இயற்கை பேரழிவின் போது அனைத்து மக்களுக்கும் நிவாரணம் உதவிகளை வழங்குவது, ரத்ததானம் வழங்குவது, மத நல்லிணக்க ஊர்வலங்களை நடத்தி ஒற்றுமை படுத்துதல் என பல்வேறு வகையிலும் இந்த அமைப்புகள் ஆரவாரமின்றி பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அமைப்புகளை தொடர்புள்ளதாக தெரிவித்து தூற்றும் அணியில் சங்பரிவார் கூட்டம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மக்கள் ஆதரவுடன் வேறு ஒன்றி வளர்ந்து வரும் இந்த அமைப்புகளை இயங்கி விடாமல் தடுத்து அழித்துவிடும் நோக்கத்தில் காபி கும்பல் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார் வைகோ.

இந்த அமைப்புகளின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையும் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகவும், சிறுபான்மையின மக்களுக்கு எதிரானதாகவும், நடுநிலையாளர்கள் நினைக்கிறார்கள்.

இந்த போக்கினை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.