ஒரே தொலைபேசி எண்ணில் இனி ஆறு பேர் வரை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி! மத்திய அரசு அறிமுகம்!!

0
79

ஒரே தொலைபேசி எண்ணில் இனி ஆறு பேர் வரை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி! மத்திய அரசு அறிமுகம்!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றின் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்பதிவு செய்வதற்கு வசதியாக cowin என்னும் செயலி மற்றும் இணையதள வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் கொரோனா தடுப்பூசி செளுத்திக்கொள்ள விரும்புபவர்கள் இந்த cowin இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அந்த வகையில், இந்த Cowin இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களின் பெயர், தொலைபேசி எண் ஆகியவை கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இந்த இணையதளம் மூலம் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை பதிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த cowin இணையதளத்தில் இனி ஆறு பேர் வரை ஒரே தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

author avatar
Parthipan K