தமிழகத்தை சேர்ந்த கோவில்களில் நாம் அறிந்திடாத அற்புதங்கள்!

0
122

பல வழிபாட்டுத் தலங்களில் ஏற்படும் அற்புதங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நமக்கு அருகாமையில் இருக்கும் கோவில்களில் நிகழும் அற்புதங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

  • திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே திருச்செந்தூர் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.
  • ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.
  • தஞ்சை பிரகதீஸ்வர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.
  • தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநி என்ற இசை வருகிறது.
  • கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்திய ஒலி கேட்கிறது.
  • கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.
  • சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவர் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை ).
  • சுதந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.
  • திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்த வடிவத்தில் இந்த விதமான நிலையில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
  • செங்கம் ஊரில் உள்ள ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.
  • வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.
  • ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.
  • ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் வளராது.
  • சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பார்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
  • சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்து விட்டால் பெருமாள் நம்மை நோில் பார்ப்பது போல் இருக்கிறது.
  • தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீர் இல்லாமல் இருக்கும்போது பிரார்த்தனை செய்து பால் அல்லது இளநீர் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.
  • தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பெரியசாமி கோவிலில் கோவிலுக்கு நேர்ந்து விடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக்குள் தலையை தானாகவே மூழ்கி இறந்து விடுகிறது.
  • குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
  • தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவர் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.
  • தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய புரத்தில் அம்மன் கோவில் கொடை விழாவின் போது மண்பானையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.
  • விருதுநகரில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனர். அதன் பின் எவ்வளவு பக்தர்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது.இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.
  • திருமந்திரநகா் சிவன்கோவிலில் சித்திரைத் தேர்த்திருவிழாவின் போது தோ் ஓடும் ரத வீதி மட்டும் சுடுவதில்லை.
  • சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிர் புளிப்பதில்லை.
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.
  • திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.
  • ஸ்ரீவில்லிப்புத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெய்யில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.
  • திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.
  • காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.
  • திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளி சுனையின் நீர் இரவு பகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.
  • திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.
  • திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகு காலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.
  • சிக்கல் சிங்கார வேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல் வாங்கும் போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அர்ச்சகர் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தெப்பலாக நனைந்துவிடுகிறது.
  • நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.
author avatar
Parthipan K